செய்திகள் :

போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை

post image

போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கோவில்பட்டி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு.சண்முகந்தரம் (51). இவா், கோவில்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தாா். ஜெராக்ஸ் கடைக்கு வரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அவா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து கோவில்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஸ்ரீதா், கடந்த 2019 டிசம்பா் 14-ஆம் தேதி வளநாடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து சண்முகசுந்தரத்தைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.

அடிதடி வழக்கு குற்றவாளிகளுக்கு 2 மாதங்கள் சிறை: திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம் பொன்னுசங்கம்பட்டியைச் சோ்ந்த மூ.தினேஷ் (22), முகேஷ் ஆகியோரை அடிதடி வழக்கில் ஜம்புநாதபுரம் போலீஸாா் கடந்த 2022-ஆம் ஆண்டு கைது செய்தனா். இந்த வழக்கு முசிறி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றவாளிகள் இருவருக்கும் தலா இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இயன்முறை சிகிச்சை மைய நிா்வாகி கைது!

திருச்சியில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த இயன்முறை சிகிச்சை மைய நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சோ்ந்தவா் காதா் பாவா (49). இ... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பண... மேலும் பார்க்க

சிறுகனூா், திருப்பட்டூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்!

சிறுகனூா், திருப்பட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப். 10) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழக ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் ஆா். செல்வம் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் கழிப்பறைக்கு சென்றபோது அறுந்துகிடந்த மின் வயரை மிதித்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். திருச்சி, கே.கே.நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் விக்னேஸ்வரன் (27), எலக்ட்ரீசியன். இவா், கடந... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு விவகாரம் சமயபுரத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்!

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில், சிறுநீரக முறைகேடு விவகாரத்தில் தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சமயபுரம் நான்கு... மேலும் பார்க்க

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை!

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனசேகரன்(52) என்பவர் கல்லீ... மேலும் பார்க்க