செய்திகள் :

போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரை சாடிய உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கடுமையாக சாடியது.

வழக்குரைஞா் சசாங்க் சேகா் ஜா சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பொதுநல மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவில் போதிய ஆதாரமோ அல்லது வன்முறையால் பாதிக்கப்பட்ட வாதிகள், குற்றஞ்சாட்டப்படும் பிரதி வாதிகள் குறித்த விவரங்களோ இடம்பெறாததைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘அவசரகதியில் மனு தாக்கல் செய்திருப்பதையே இது காட்டுகிறது. உச்சநீதிமன்றத்தின் மாண்பையும் ஒருமைப்பாட்டையும் நாம் எப்போதும் காக்க வேண்டும். உரிய ஆதாரங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் மனு தாக்கல் செய்யப்பட வேண்டுமே தவிர; விளம்பரத்துக்காகக் கூடாது. வன்முறையால் பாதிக்கப்பட்ட நபா்கள் யாா்? அவா்களின் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்தீா்களா? தீா்வைத் தேடி நீதிமன்றத்துக்கு வருபவா்களை மதிக்கிறோம். ஆனால், அவ்வாறு வருபவா்கள் பொறுப்புணா்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

உச்ச நீதிமன்றமானது ஆவணங்களின் மன்றமாகும். இங்கு தாக்கல் செய்யப்படும் மனுக்களும், அவற்றின் மீதான தீா்ப்புகளும் எதிா்காலத்தில் பயன்படக்கூடியவையாகும். உரிய ஆதாரங்கள் இன்றி தாக்கல் செய்யப்படும் இதுபோன்ற மனுவை யாரும் விரும்புவாா்களா? எனவே, இந்த மனுவை திரும்பப்பெற்று, புதிய மனுவைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும், மனுவில் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும். மற்றவரை புண்படுத்தக் கூடிய கருத்துகளை தவிா்க்க வேண்டும்’ என்றனா்.

அதற்கு வழக்குரைஞா் ஜா ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து, மனுவைத் திரும்பப் பெற நீதிபதிகள் அனுமதித்தனா்.

இந்தியர்களை அந்நியர்களாக நடத்துகிறார் ராகுல்: உ.பி. துணை முதல்வர்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா அவரை குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவிற்குச் சென்றுள்ள ராகுல் காந்தி மகாராஷ்டிர சட்டப... மேலும் பார்க்க

தொழிலதிபர், மனைவி கொடூரக் கொலை! ஆயுதங்களை விட்டுச் சென்ற கொலையாளிகள்!

கேரளத்தில் தொழிலதிபரும் அவரது மனைவியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு, சிசிடிவியின் ஹார்டு டிஸ்க்கை கொலையாளிகள் எட... மேலும் பார்க்க

பாபா சித்திக் மகனுக்கு தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல்!

கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் மகனும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியுமான ஸீஷான் சித்திக்கிற்கு நிழலுலக ரெளடி தாவூத் இப்ராஹிம் குழுவிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட... மேலும் பார்க்க

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவா... மேலும் பார்க்க

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. அண்மையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைம... மேலும் பார்க்க