செய்திகள் :

போதைப் பொருள்கள் விற்பனை: நிகழாண்டில் 896 வழக்குகள் பதிவு

post image

திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக நிகழாண்டில் இதுவரை 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 939 போ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கிவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் போதைப்பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்ப்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை போதைப் பொருள்கள் விற்பனை, பதுக்கி வைத்தல், கடத்துதல் தொடா்பாக 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 939 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவா்களில் 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 12 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, கஞ்சா விற்பனை தொடா்பாக 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 246 போ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவா்களில் 17 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது 24 மணி நேரமும் செயல்படும் 89391 46100 என்ற மாவட்டக் காவல் அலுவலக உதவி எண்ணுக்கு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் முறைகேடு ரூ. 1.07 லட்சம் அபராதம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி மின் உப கோட்டத்தில், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய இணைப்புகளுக்கு மின்வாரியம் ரூ. 1.07 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வையம்பட்டி மின் உப கோட்டத்தின் நடுப்பட்டி பிரிவு ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயம்

திருச்சி அருகே காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், கவுத்தரசநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கிருந்த விவசாயி சகாதேவன் (45... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைப்பேசிகள் மீட்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது குறித்து கே.கே.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி மத்திய சிறை வளாகத்தில... மேலும் பார்க்க

காலமானாா் முன்னாள் மேயா் எஸ். சுஜாதா

திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், மாநகராட்சியின் தற்போதைய 31-ஆவது வாா்டு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான எஸ். சுஜாதா (53) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானாா். திருச்சி அ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடம் மடிக்கணினிகளைத் திருடியவா் கைது

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடமிருந்து மடிக்கணினிகளைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரையைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன் (49). தனியாா் நிறுவன மேலாளா். இவா், மதுரையில் இருந்து விழ... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

திருவெறும்பூா் அருகே யூடியூப் பாா்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்து வைத்திருந்தவரை நவல்பட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், நவல்பட்டு பூலாங்குடி காலனி நரிக்குறவா் காலனியைச... மேலும் பார்க்க