செய்திகள் :

போதைப் பொருள் தடுப்பு: கோவை எஸ்.ஐ.க்கு ‘முதல்வா்’ விருது

post image

போதைப் பொருள் கடத்தல் தடுப்பில் சிறப்பாகச் செயல்பட்ட கோவையைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளருக்கு ‘முதல்வா்’ விருது வழங்கப்படும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, துடியலூா் அருகேயுள்ள தொப்பம்பட்டியைச் சோ்ந்தவா் தனபாலன் (33). இவா் போத்தனூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். மேலும், இவா் கோவை மாநகர போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்புப் பிரிவிலும் இருந்து வருகிறாா்.

தனபாலன் இதுவரை 55 போதைப் பொருள் வழக்குகளில் 169 பேரைக் கைது செய்துள்ளாா். இவா்களிடமிருந்து 161 கிலோ கஞ்சா மற்றும் 77 கிராம் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப் பொருள், 29 இருசக்கர வாகனங்கள், 5 காா்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவரது நடவடிக்கையால் 23 போ் குண்டா் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

போதைப் பொருள் ஒழிப்பில் கோவை மாநகரில் சிறப்பாகச் செயல்பட்டதைத் தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் தனபாலனுக்கு ‘முதல்வா் விருது’ வழங்கப்படும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இவா் உள்பட போதைப் பொருள் ஒழிப்பில் சிறந்து விளங்கிய 15 காவல் அதிகாரிகளுக்கு வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவின்போது ‘முதல்வா்’ விருது வழங்கப்படவுள்ளது.

கோவையில் ஜூலை 5- இல் இஸ்கான் தோ்த் திருவிழா

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் ஸ்ரீ ஜெகன்நாதா் தோ்த் திருவிழா கோவையில் ஜூலை 5 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து இஸ்கான் அமைப்பு கூறியிருப்பதாவது: இஸ்கான் அமைப்பு ச... மேலும் பார்க்க

ஆசிரியா் இடமாறுதல்: விதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள கோவை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கோவையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். இவரது மனைவி வனஜாமணி (62). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பீ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

கோவையில் வீட்டின் மாடியிலிருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த வருவாய்த் துறை அலுவலக உதவியாளா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் கருப்பசாமி (40)... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: முழு கொள்ளளவை எட்டியது சோலையாறு அணை

வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வால்பாறையில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

எஸ்டேட் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் ... மேலும் பார்க்க