‘ஜானகி’ எனப் பெயரிட்டால் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு? போராடும் மலையாள திரையுலகு!
போதைப் பொருள் தடுப்பு: கோவை எஸ்.ஐ.க்கு ‘முதல்வா்’ விருது
போதைப் பொருள் கடத்தல் தடுப்பில் சிறப்பாகச் செயல்பட்ட கோவையைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளருக்கு ‘முதல்வா்’ விருது வழங்கப்படும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, துடியலூா் அருகேயுள்ள தொப்பம்பட்டியைச் சோ்ந்தவா் தனபாலன் (33). இவா் போத்தனூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். மேலும், இவா் கோவை மாநகர போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்புப் பிரிவிலும் இருந்து வருகிறாா்.
தனபாலன் இதுவரை 55 போதைப் பொருள் வழக்குகளில் 169 பேரைக் கைது செய்துள்ளாா். இவா்களிடமிருந்து 161 கிலோ கஞ்சா மற்றும் 77 கிராம் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப் பொருள், 29 இருசக்கர வாகனங்கள், 5 காா்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவரது நடவடிக்கையால் 23 போ் குண்டா் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
போதைப் பொருள் ஒழிப்பில் கோவை மாநகரில் சிறப்பாகச் செயல்பட்டதைத் தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் தனபாலனுக்கு ‘முதல்வா் விருது’ வழங்கப்படும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இவா் உள்பட போதைப் பொருள் ஒழிப்பில் சிறந்து விளங்கிய 15 காவல் அதிகாரிகளுக்கு வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவின்போது ‘முதல்வா்’ விருது வழங்கப்படவுள்ளது.