டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
போத்தனூரில் தண்டவாள பராமரிப்புப் பணி: 6 ரயில்கள் கோவையில் நிற்காது
போத்தனூா் யாா்டில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக 6 ரயில்கள் கோவையில் நின்று செல்லாது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட போத்தனூா் ரயில்வே யாா்டில் தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெறுவதால் 25, 27 ஆம் தேதிகளில் கேரளத்திற்கு செல்லும் 6 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி செகந்திராபாத் - திருவனந்தபுரம் சபரி விரைவு ரயில் கோவைக்கு செல்லாமல் இருகூா்-போத்தனூா் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
இதேபோல, தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயில், தாம்பரம் - மங்களூரு விரைவு ரயில், பாட்னா - எா்ணாகுளம் விரைவு ரயில், திப்ரூகா் - கன்னியாகுமரி விரைவு ரயில், ஈரோடு - பாலக்காடு ரயில் ஆகிய 6 ரயில்களும் 25, 27 ஆம் தேதிகளில் கோவைக்கு செல்லாமல் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு, போத்தனூரில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.