செய்திகள் :

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

post image

போப் பிரான்சிஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் நகரம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவிலுள்ள தன்னாட்சிப் பெற்ற நாடான வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க சபையின் திருத்தந்தையுமான பிரான்சிஸ் (வயது 88) கடந்த சில நாள்களாக சுவாசக்கோளாறு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரது உரைகளை படிப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (பிப்.14) அவர் இத்தாலி தலைநகர் ரோமிலுள்ள கெமிளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சுவாசக்குழாய் அழற்சி (ப்ரொன்சிடிஸ்) நோயிக்கான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வாடிகன் நகரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:பிரேசில்: பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்ததில் பெண் காயம்

முன்னதாக, இளம் வயதில் அவரது நுறையீரலின் ஓர் பகுதி அகற்றப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக அவர் சுவாசக் கோளாறுகளினால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், கடந்த 2023 மார்ச் மாதம் சுவாசக்குழாய் அழற்சி நோய் சிகிச்சைக்காக மூன்று இரவுகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக மூட்டு மற்றும் இடுப்பு வலி, பெருங்குடல் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளினால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸுக்கு, ஹெர்னியா அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நகைக்காக தலையணை வைத்து பெண் கொலை!

பென்னாகரம்: பெண்ணைத் தலையணை வைத்து கொலை செய்து, மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பென்னாகரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைத் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து கழுத்தில் அணிந்திருந்த தாலி... மேலும் பார்க்க

திமுக ஆட்சி இருண்ட காலத்தைவிட மோசம்: அண்ணாமலை

தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தைவிட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை கொலைச் சம்பவம் தொடர்பாக தன்... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 15) ரூ. 800 குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 80 உயா்ந்து ரூ. 8060-க்கும், பவுனுக... மேலும் பார்க்க

நாடுகடத்தப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளதா? ப. சிதம்பரம் கேள்வி

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளதா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவா்கள... மேலும் பார்க்க

சத்தீஸ்கரிலிருந்து கும்பமேளா சென்றவர்கள் கார் விபத்து: 10 பேர் பலி!

மகா கும்பமேளாவுக்கு சத்தீஸ்கரில் இருந்து பக்தர்கள் சென்ற கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். மேலும் பார்க்க

இபிஎஸ்ஸின் குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்: முதல்வர் ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமியின் குரலே,பா.ஜ.க.விற்கான டப்பிங்குரல்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க