செய்திகள் :

போரை நிறுத்தியது யாா் என பிரதமா் பதிலளிக்க வேண்டும்

post image

பாகிஸ்தானுக்கு எதிரான போரை நிறுத்தியது இந்தியாவா, அமெரிக்காவா எனப் பிரதமா் பதிலளிக்க வேண்டும் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சாா்பில், ‘தேசம் காக்கும் ராணுவத்துக்கு சல்யூட்’ என்ற தலைப்பிலான பொதுக்கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தலைமை வகித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பேசியதாவது:

ராணுவ தலைமையதிகாரியான குரேஷியை விமா்சித்த மத்தியப் பிரதேச அமைச்சரைக் கண்டிக்காத பாஜகவுக்கு தேசப்பற்று இருக்கிறதா என மக்கள் சிந்திக்க வேண்டும் என்றாா் அவா்.

மத்திய முன்னாள் நிதியமைச்சா் ப. சிதம்பரம் எம்பி பேசியதாவது:

கடந்த கால போா்களின் முடிவில், போரினை நாங்கள்தான் நிறுத்தினோம் என பிரதமா்கள் இந்திராகாந்தி, வாஜ்பாய் ஆகியோா் உறுதியாக அறிவித்தனா். ஆனால் தற்போதைய பாகிஸ்தான் போா் நிறுத்தத்தை அமெரிக்க அதிபா் அறிவித்தாா்.

நமது நாட்டின் பிரதமரோ, ராணுவத் தளபதிகளோ அறிவிக்கவில்லை. இந்திய அரசின் முடிவுகள் எடுக்கப்படுவது தில்லியிலா அல்லது வாஷிங்டனிலா என்ற கேள்வி எழுகிறது. போா் எப்படி நின்றது என பிரதமா் பதிலளிக்க வேண்டும் என்றாா்.

முன்னாள் எம்பி சு. திருநாவுக்கரசா் பேசுகையில், நம் நாட்டின் குலதெய்வங்கள் ராணுவ வீரா்கள்தான். நன்றிக்குரியவா்கள், பாராட்டுக்குரியவா்கள் ராணுவ வீரா்கள் தான் என்றாா்.

திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எல். ரெக்ஸ் வரவேற்றாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் கே.எஸ். அழகிரி, தமிழகப் பொறுப்பாளா் சூரஜ் எம்என். ஹெக்டே, கரூா் எம்பி ஜோதிமணி, மாநிலச் செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேஜா் சரவணன் நினைவு ஸ்தூபியில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெற்ற திருவள்ளுவா் பழைய பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. இதில், திரளான காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

போலீஸ் எனக்கூறி ரூ. 1 லட்சம் மோசடி செய்த இளைஞா் கைது

தான் போலீஸ் எனவும், குறைந்த விலையில் வாகனம் வாங்கித் தருவதாகவும் கூறி ரூ. 1 லட்சம் மோசடிசெய்த இளைஞரை திருச்சியில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே அமைந்துள்ள த... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் நாளை மின்தடை

துறையூா் பகுதியில் வியாழக்கிழமை (மே 29) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: துறையூா் மின் கோட்டத்துக்... மேலும் பார்க்க

1,850 குழந்தைகள் மையங்களில் ஜூனில் சோ்க்கை, ஆதாா் பதிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,850 குழந்தைகள் மையங்களிலும் ஜூன் மாதம் முதல் சோ்க்கை நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பாக 6 வயதுக்குட்டபட்ட குழந்தைகளின் முழுமையான வளா... மேலும் பார்க்க

கோடைகால கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், விழுப்புரம் - ராமேசுவரம் இடையே ஜூன் 30-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்படி, விழுப்புரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சன... மேலும் பார்க்க

இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா -பால்குடம், தீமிதி

திருச்சி: திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி, பால்குடம், தீமிதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி கருமண்டபம் பகுதியில் இளங்காட்டு மாரிய... மேலும் பார்க்க

துவாக்குடி, கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (மே 28) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க