செய்திகள் :

திக்வேஷ் ரதியை அவமதித்த ரிஷப் பந்த்: அஸ்வின்

post image

திக்வேஷ் ரதி செய்த ரன் அவுட்டுக்கு ரிஷப் பந்த் செயலை கடுமையாக விமர்சித்து அஸ்வின் பேசியுள்ளார்.

நேற்றைய போட்டியில் ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மாவை மன்கட் முறையில் லக்னௌ வீரர் ரன் அவுட் செய்தார். இதனை லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் வேண்டாம் என நடுவரிடம் முறையிடுவார்.

இது போட்டியையே மாற்றிய தருணமாக இருந்தது. ஜிதேஷ் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றதுடன் குவாலிஃபயர் 1-க்கு தகுதிபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழக வீரர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:

மோசமான கேப்டன் ரிஷப் பந்த்

திக் வேஷ் ரதி பந்துவீசும்போது ஜிதேஷ் வெளியேறாமல் இருந்தார். பின்னர் அது மூன்றாம் நடுவரிடம் சென்று நாட் அவுட் கொடுக்கப்பட்டது. அது பிரச்னை இல்லை. ஆனால், இதனை ரிஷப் பந்த் வேண்டாம் எனக் கூறியது என்ன மாதிரியான ஸ்போர்ட்மேன்ஷிப்? வளருங்கள் ரிஷப் பந்த்!

ஒரு கேள்வி கேட்கிறேன். திக்வேஷ் ரதி உங்களுடைய மகன் என வைத்துக்கொள்ளுங்கள். யார் இந்த விடியோவை பார்த்தாலும் உங்கள் மகனை கோடிக்கணக்கானவர்கள் முன்பாக ரிஷப் பந்த் விமர்சிக்கிறார்.

ரிஷப் பந்த் கேப்டன்சியில் சிறிது எல்லையை மீறிவிட்டார். பொதுவாக பந்துவீச்சாளர்களை பாதுகாப்பதுதான் கேப்டனின் வேலை. அவரைச் சிறியவனாக்குவதல்ல.

திக்வேஷ் ரதி என்னுடைய உறவினர் இல்லை

ரிஷப் பந்த் இது குறித்து முன்னமே லக்னௌ அணியில் பேசியுள்ளாரா தெரியவில்லை. கோடிக்கணக்கான மக்கள் முன்பாக ஒரு இளைஞரை இழிவுப்படுத்தாதீர்கள்.

நாம் வேறு யாருக்காவது அப்படி செய்வோமா? அது ஒரு அவமதிப்பு.

இந்த நிகழ்வு திவேஷ் ரதியை சிறியவனாக்கியிருக்கும். அவர் மீண்டும் இதனைச் செய்ய மாட்டார். மக்கள் கமெண்ட் செக்சனில் அவரை மீண்டும் செய்யக் கூடாதென்பார்கள்.

அவர் ஏன் செய்யக்கூடாது? திக்வேஷ் ரதி என்னுடைய உறவினர் இல்லை. அவர் யாரென்றே தெரியாது. கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் பந்துவீச்சாளரது முடிவை பின் வாங்கினால் அது அவரை அவமதிப்பதாகவே அர்த்தம் என்றார்.

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி!

குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 10 ஓவர்களில் இ... மேலும் பார்க்க

ஆர்சிபியின் அபார பந்துவீச்சில் பணிந்த பஞ்சாப் கிங்ஸ்; 102 ரன்கள் இலக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 29) நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் க... மேலும் பார்க்க

ஆர்சிபி அபார பந்துவீச்சு; விக்கெட்டுகளை இழந்து திணறும் பஞ்சாப் கிங்ஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 29) நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டி... மேலும் பார்க்க

குவாலிஃபையர் 1: ஆர்சிபி பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ஜோஸ் ஹேசில்வுட்!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று நடைபெறும் குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல்... மேலும் பார்க்க

ஐபிஎல் எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ்: மும்பையை வீழ்த்துமா? மும்பையிடம் வீழுமா?

ஐபிஎல் தொடரில் கடைசி இரண்டு லீக் போட்டிகளில் தோல்வியைத் தழுவிய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.கடந்த மார்ச் மாதம் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீச... மேலும் பார்க்க

ஐபிஎல் பிளே-ஆஃப்ஸில் வெற்றி சதவிகிதம்..! ஆர்சிபிக்கு 7-ஆவது இடம்!

ஐபிஎல் பிளே-ஆஃப்ஸில் ஒவ்வொரு அணிகளின் வெற்றி சதவிகிதம் குறித்த பட்டியலில் ஆர்சிபி 7-ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் மும்பை, சிஎஸ்கே தலா 5 கோப... மேலும் பார்க்க