செயில் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 11 சதவிகிதம் உயர்வு!
புது தில்லி: அரசு பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் - (செயில்), மார்ச் உடன் உள்ள காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 11 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்து ரூ.1,250.98 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2023-24 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் நிறுவனம் ரூ.1,125.68 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்ததாக தெரிவித்தது.
நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் வருவாயை 2025 நிதியாண்டின் 4-வது காலாண்டில் ரூ.29,316.14 கோடியாக உயர்த்துள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் இது ரூ.27,958.52 கோடியாக இருந்தது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டு செலவுகள் ரூ.28,020.56 கோடியாக இருந்தத நிலையில், 2024ஆம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் அது ரூ.26,473.86 கோடியாக இருந்தது.
காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில், நிகர லாபம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.141.89 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடும்போது இது சுமார் 9 மடங்கு அதிகமாகும்.
2025 நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,371.80 கோடியாகக் குறைந்துள்ளது, இதுவே 2024ஆம் நிதியாண்டில் அது ரூ.3,066.67 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, நிதியாண்டில் ரூ.10 பங்குக்கு ரூ.1.60 இறுதி ஈவுத்தொகையை பரிந்துரைத்துள்ளது.
இதையும் படிக்க: பாட்டா இந்தியாவின் 4-வது காலாண்டு லாபம் 36% சரிவு!