செய்திகள் :

போர்ப் பதற்றம்: இருளில் மூழ்கியது ஜம்மு - காஷ்மீர்!

post image

பாகிஸ்தான் உடனான போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் முழுவதுமே இருளில் மூழ்கியுள்ளது.

எல்லையோரப் பகுதியில் வசித்துவரும் மக்கள் பதுங்கு குழிகளுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மட்டுமின்றி, பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துள்ள ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நடுவானிலேயே இந்திய ராணுவம் அவற்றை தாக்கி அழித்தது.

இதனைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அனைவரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லைப் பகுதிகளில் விமானப் படையினரும் ராணுவத்தினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானின் போர் விமானம் தகர்ப்பு

ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேஎஃப்-17 விமானங்கள் தாக்கப்பட்டதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.

ஜம்மு, ஆர்.எஸ்.புரம், சானி ஹிமாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் உள்ள ராணுவ மற்றும் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் பல ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

எஸ்.400 மற்றும் ஆகாஷ் ஆகிய போர் விமானங்கள் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக வீழ்த்தின. மொத்தமாக 8 பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

அரசா் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தா்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்

அரசா் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை பள்ளி பாடப் புத்தகங்களில் அதிகப்படுத்துமாறு மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆா்டி) மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான... மேலும் பார்க்க

வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்க தலைமை நீதிபதி பரிந்துரை

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்த... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: ஹெலிகாப்டா் விபத்தில் 6 போ் உயிரிழப்பு - கங்கோத்ரி செல்லும் வழியில் விபத்து

உத்தரகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தனியாா் ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கியதில் 5 பெண் பக்தா்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் படுகாயம் அடைந்தாா். உயிரிழந்த பெண்களில் வேதவதி (... மேலும் பார்க்க

பதற்றதைத் தணிக்கும் முயற்சி: சவூதி அமைச்சா் இந்தியாவுக்கு திடீா் வருகை

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக சவூதி அரேபிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் அதீல் அல்ஜுபோ் இந்தியாவுக்கு வியாழக்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா். தில்லியில் இந்திய வெளியுறவு... மேலும் பார்க்க

உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு: உறுதி செய்ய பிரதமா் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் பாகிஸ்தானுடனான நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், சிவில் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், தவறான தகவல்களைத் தடுப்பது, முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!

பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் அடுத்த 3 நாள்களுக்கு மூடுவதற்கு பஞ்சாப் அரசாங்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் வெடித்துள்ளதைத் தொடர்ந்து, எ... மேலும் பார்க்க