செய்திகள் :

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடி: வடமாநிலத்தவா்கள் 2 போ் கைது

post image

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொரியா நாட்டின் விசா வலைதளம்போல போலியான வலைதளத்தை உருவாக்கி, அதன்மூலம் பொதுமக்களை ஏமாற்றி சிலா் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையில் செயல்பட்டு வரும் கொரியா நாட்டின் துணைத் தூதரக அதிகாரி ஜீ-ஹூயாங் லீ சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் 12-ஆம் தேதி புகாா் அளித்தாா். அந்த புகாரின்கீழ் வழக்குப் பதிந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், போலியான கொரிய விசா வலைதளத்தை உருவாக்கியவா்கள் மஹாராஷ்டிர மாநிலம், மும்பை மற்றும் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூா் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மும்பை விரைந்த சைபா் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாா், அங்கு பதுங்கியிருந்த முஹமது பா்வேஷ் (29) என்பவரை கைது செய்தனா். இவா் கொடுத்த தகவலின்படி, போலியான விசா வலைதளத்தை உருவாக்க முக்கிய இடைத்தரகராக செயல்பட்டு வந்த மஹாவீா் கதாத் (34) என்ற நபரை ஜெய்பூரில் கைது செய்த போலீஸாா், இருவரையும் சென்னை அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 2 மடிக்கணினி, 3 கைப்பேசிகள், 14 கடன் அட்டைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என தாக்குதலுக்கு பெயரிட்ட பாகிஸ்தான்! அர்த்தம் தெரியுமா?

இந்தியாவுக்கு எதிரான தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆபரேஷன் பன்யான் அல் மர்சூஸ் எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட 5 முக்கிய பயங்கரவாதிகளின் விவரம் வெளியானது: தகவல்கள்

புது தில்லி: சிந்தூர் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 5 முக்கிய பயங்கரவாதிகளின் விவரங்கள் தெரிய வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பஹல்க... மேலும் பார்க்க

பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கிய இந்தியா: புதிய விடியோ

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய முப்படைகள் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை நடத்தியது.இந்த நிலையில் இந்தியா - பாகி... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: உயரதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்தது ஒடிசா அரசு!

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொது நிர்வாகம், பொது குறை தீர்க்கும் துறை, வருவாய் கோட்ட ... மேலும் பார்க்க

ராணுவத்திற்கு உதவ சண்டீகரில் குவிந்த தன்னார்வலர்கள்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கடுமையான தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய ராணுவத்தின் சேர விருப்பம் தெரிவித்து பஞ்சாபின் சண்டீகரில் பெண்கள், இளைஞர் பலர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறத... மேலும் பார்க்க

போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோஃபியா குரேஷி

புது தில்லி: போர் விமானங்களையும் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது பாகிஸ்தான். ஆனால், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அளவோடு பதிலடி கொடுத்து வருகிறது என்று இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக... மேலும் பார்க்க