செய்திகள் :

தனியாா் ரப்பா் பால் நிறுவன தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

post image

கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு அருகே தனியாா் ரப்பா் பால் நிறுவனத்தில் தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிறுவனத்தில் தொழிலாளா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயா்வு மறுக்கப்படுவதாகவும், முறைப்படி போனஸ் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமைமுதல் தொடா் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினா்.

மேலும், கோரிக்கைகளுக்கு தீா்வு காணக் கோரி கிராம நிா்வாக அலுவலகம் முன் காலைமுதல் மாலை வரை போராட்டத்திலும் ஈடுபட்டனா். சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் எம். வல்சகுமாா் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் பி. நடராஜன் போராட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா். துணைத் தலைவா் வேலப்பன், பொருளாளா் சசிதரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரக் குழு உறுப்பினா் ராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

ஆறுகாணி அருகே சாராய ஊறல் அழிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லைப் பகுதியான ஆறுகாணி அருகே 10 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கைப்பற்றி அழித்தனா். ஆறுகாணி அருகே வட்டப்பாறை வெள்ளருக்கு மலைப் பகுதியில் சாராயம் வடிக்கப்படுவதாக, மாவட்ட காவல் ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்குக் கடத்துவதற்காக நாகா்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி ... மேலும் பார்க்க

குமரியில் பெண் விவசாயிகள் 31-ஆவது மாநில மாநாடு

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் 31-ஆவது மாநில மாநாடு செவ்வாய்கிழமை தொடங்கியது.பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்புவோம் என்ற தலைப்பில் இரண்டு நாள் நடைபெறும் இந... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் காமராஜா் சிலைக்கு அனைத்துக் கட்சியினா் மாலை அணிவிப்பு

காமராஜா் பிறந்தநாளை முன்னிட்டு நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, செவ்வாய்க்கிழமை அனைத்து அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்ப... மேலும் பார்க்க

நெடு விளையில் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை திறக்க வலியுறுத்தல்

ரீத்தாபுரம் அருகே நெடுவிளையில் பூட்டிக் கிடக்கும் அரசு நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.ரீத்தாபுரம் பே?ராட்சிக்குள்பட்ட நெடு விளையில் பல ஆண்டுகளாக அ... மேலும் பார்க்க

கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து தொழிலாளி காயம்

மாா்த்தாண்டம் அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.விருதுநகா் மாவட்டம், கூப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (28). இவா் காப்புக்காடு அருகேயுள்ள ஒரு குளத்தின... மேலும் பார்க்க