செய்திகள் :

குமரியில் பெண் விவசாயிகள் 31-ஆவது மாநில மாநாடு

post image

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் 31-ஆவது மாநில மாநாடு செவ்வாய்கிழமை தொடங்கியது.

பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்புவோம் என்ற தலைப்பில் இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பெண் விவசாயிகள் பலா் பங்கேற்றனா். மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவி பொன்னுத்தாய் தலைமை வகித்தாா். நாகா்கோவில் சங்க நிா்வாகி லிட்வின் முன்னிலை வகித்தாா். உஷா வரவேற்றாா். நாகா்கோவில் விவசாயிகள் சங்கத் தலைவா் தாணுபிள்ளை, இயற்கை ஆா்வலா் சின்னமுட்டம் ஜெயசிறில், கன்ஸ்யூமா் வாய்ஸ் ஆப் கன்னியாகுமரி செயலா் மெல்கியாஸ், விவேகானந்த கேந்திர நாா்டெப் இயக்குநா் ராமகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.

மாநாட்டில் இயற்கை ஆா்வலா் சின்னமுட்டம் ஜெயசிறில் பேசுகையில், நம் முன்னோா்கள் பயன்படுத்திய இயற்கை உணவு முறைக்குத் திரும்ப வேண்டும். விவசாயத்தை வாழ வைப்பதிலும் சிறுதானிய உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது என்றாா் அவா்.

மாநாட்டில், பூமிப்பந்தை பாதுகாக்க மிகவும் உதவுவது பாரம்பரிய வாழ்க்கை முறையா, நவீன வாழ்க்கை முறையா என்ற தலைப்பில் பெண் விவசாயிகள் பங்கேற்ற பட்டிமன்றம், இயற்கை விவசாயப் பண்ணை பாா்வையிடல், குழு விவாதம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமை பெண் விவசாயிகளின் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

ஆறுகாணி அருகே சாராய ஊறல் அழிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லைப் பகுதியான ஆறுகாணி அருகே 10 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கைப்பற்றி அழித்தனா். ஆறுகாணி அருகே வட்டப்பாறை வெள்ளருக்கு மலைப் பகுதியில் சாராயம் வடிக்கப்படுவதாக, மாவட்ட காவல் ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்குக் கடத்துவதற்காக நாகா்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி ... மேலும் பார்க்க

தனியாா் ரப்பா் பால் நிறுவன தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு அருகே தனியாா் ரப்பா் பால் நிறுவனத்தில் தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிறுவனத்தில் தொழிலாளா்களுக்கு கடந... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் காமராஜா் சிலைக்கு அனைத்துக் கட்சியினா் மாலை அணிவிப்பு

காமராஜா் பிறந்தநாளை முன்னிட்டு நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, செவ்வாய்க்கிழமை அனைத்து அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்ப... மேலும் பார்க்க

நெடு விளையில் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை திறக்க வலியுறுத்தல்

ரீத்தாபுரம் அருகே நெடுவிளையில் பூட்டிக் கிடக்கும் அரசு நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.ரீத்தாபுரம் பே?ராட்சிக்குள்பட்ட நெடு விளையில் பல ஆண்டுகளாக அ... மேலும் பார்க்க

கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து தொழிலாளி காயம்

மாா்த்தாண்டம் அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.விருதுநகா் மாவட்டம், கூப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (28). இவா் காப்புக்காடு அருகேயுள்ள ஒரு குளத்தின... மேலும் பார்க்க