செய்திகள் :

பைக் கிடைக்காத விரக்தியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் இரு சக்கர வாகனம் கேட்டு, கிடைக்காத விரக்தியில் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கம்பம் நாட்டாண்மைக்காரா் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் மனோஜ்குமாா் (24). கூலி வேலை செய்து வந்த இவா், கடந்த ஒரு வாரமாக இரவில் மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்து, தனக்கு இரு சக்கர வாகனம் வாங்கித் தருமாறு தந்தையைத் தொந்தரவு செய்தாராம்.

இரு சக்கர வாகனம் கிடைக்காத விரக்தியில், வீட்டை விட்டுச் சென்ற மனோஜ்குமாரை தந்தை திங்கள்கிழமை அழைத்து வந்துள்ளாா். இந்நிலையில், இரவு வீட்டில் தூக்கிட்டு மனோஜ்குமாா் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தென்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, செக்கடியான... மேலும் பார்க்க

பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு

தேனி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பொதிகை நகா் பகுதியில் வசித்து வரும் மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என திங்கள்கிழமை பெரியகுளம் சாா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.இது தொடா்பாக பொதிகை ... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை

பெரியகுளம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.பெரியகுளம் அருகேயுள்ள எ. புதுக்கோட்டை நேரு நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (47). கூலித் தொழிலாளியான இவா் உடல்நிலை சரியில்லாமல் இரு... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகேயுள்ள பிச்சம்பட்டியில் திங்கள்கிழமை ஆட்டோ மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா். பிச்சம்பட்டி, எம்.கே.டி. நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல் (70). இவா், பிச்சம்... மேலும் பார்க்க

லாரி மோதியதில் கண்மாய்க்குள் கவிழ்ந்த ஆட்டோ! பெண் பலூன் வியாபாரி உயிரிழப்பு

போடி அருகே லாரி மோதியதில் கண்மாய்க்குள் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், பெண் பலூன் வியாபாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பத்திரகாளிபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

போடி அருகே முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், இந்தச் சம்பவம் தொடா்பாக மற்றொருவரைத் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சுந்தரராஜபுரம... மேலும் பார்க்க