செய்திகள் :

``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிகை முன்பு அழுத மாணவி

post image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி அளித்த வன்கொடுமை விவகாரத்தை நேற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். மேலும், இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 நாள்களுக்குள் எஃப்.ஐ.ஆர் நகலுடன் விரிவான அறிக்கையை சமர்பிக்கவும் தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம் அனுப்பியிருக்கிறது ஆணையம். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெய்வச்செயல் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்காததால் தெய்வச்செயலுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி தனக்கு நீதி கேட்டும், தெய்வச்செயல் மீது நடவடிக்கை எடுக்கவும், தனது வழக்கில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை நடந்துகொள்ளும் விதமும், விசாரணை நடத்தும் முறையும் சரியில்லை எனக் குற்றம்சாட்டி இன்றைய தினம் ஆளுநரிடம் புகாரளிப்பதற்காக சென்னை வந்தார். ஆனால், முன்கூட்டியே ஆளுநரை சந்திப்பதற்கான அனுமதி நேரம் கேட்கப்படாத காரணத்தினால், ராஜ்பவனுக்குள் செல்ல மாணவிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஆளுநர் மாளிகைக்கு வெளியே காத்திருந்தபோது, திடீரென அங்குவந்த பெண் போலீஸார் மாணவியையும், அவருடன் வந்த தாயையும் விசாரணைக்கு அழைத்துசெல்வதாகக் கூறி ஆட்டோவில் வலுகட்டாயமாக ஏற்றிச்சென்றனர். பெண் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த மாணவியும், அவரின் தாயும் ``எங்கள் அனுமதி இல்லாமல் எங்கு அழைத்து செல்கிறீர்கள். ஆளுநரிடம்தான் புகாரளிக்க வந்தோம். உங்களிடம் கிடையாது. ஆட்டோவை நிறுத்தவில்லை என்றால் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துவிடுவோம்’’ என கத்தி கூச்சலிட்டனர்.

தெய்வச்செயல்

பத்திரிகை, ஊடகவியலாளர்கள் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று அந்தக் காட்சிகளை பதிவு செய்ததால், திகைத்துபோன போலீஸார் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு அருகே ஆட்டோவை நிறுத்தி மாணவியையும், தாயையும் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து, இருவரும் வேறு ஆட்டோ பிடித்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். இதுகுறித்து பேசிய மாணவி, ``போலீஸ்காரங்க எங்க கூட்டிக்கிட்டுப் போறேன்னே சொல்லல. வலுகட்டாயமாக ஏத்திக்கிட்டுப் போறாங்க. நக்கலாக சிரிக்கிறாங்க...’’ என்றார் கண்ணீரோடு.

புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக

அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ``தமிழக அரசால் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபானங்கள் புதுச்சேரி மாநிலத்தில் போலியாக தயாரிக்கப்படுகிறது. அதன்பிற... மேலும் பார்க்க

'அண்ணன் சீமானைவிட சில விஷயங்களில் வேல்முருகன் ஒருபடி மேல்!' - சொல்கிறார் நாதக நத்தம் சிவசங்கரன்!

நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்தே, அதில் பயணிக்கும் நத்தம் சிவசங்கரன் தற்போது மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வகிக்கிறார். ஆனால் அண்மைகாலமாக கட்சி நடவடிக்கைகளிலிருந்து அவர் ஒதுங்கியிருப்பத... மேலும் பார்க்க

'தவெகவும் பாஜகவும் ஒண்ணு..!' - திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து, சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வலம் வந்தார். சமூகவலைதளங்களில் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக பேட்டியளித்து பிரபல... மேலும் பார்க்க

Gaza: தரை வழி உதவியைத் தடுக்கும் இஸ்ரேல்; வான் வழியே உதவியதா சீனா... வைரல் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்துவரும் போரில் காஸா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2, 2025 அன்று காஸாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியது. அதனால் தற்போது இஸ்ரேலின் ராணுவத்தால் கா... மேலும் பார்க்க

தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை கோரும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் கூட்ரோடு அருகே, நான்குவழிச் சாலை அமைத்து சில வருடங்கள் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை செல்ல வாகன ஓட்ட... மேலும் பார்க்க

`எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும்' - மனோ தங்கராஜ் காட்டம்!

பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் ஆவின் பணிகளை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆவின் பொருள்கள் எந்த தடையும் இல்லாமல் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆவினில் டிலைட் பால... மேலும் பார்க்க