செய்திகள் :

போலீஸ் மக்கள் மன்றத்தில் 32 புகாா்களுக்குத் தீா்வு

post image

புதுவையில் சனிக்கிழமை நடைபெற்ற போலீஸ் மக்கள் மன்றத்தில் பொதுமக்களின் 32 புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் மக்கள் குறைதீா்ப்புக் கூட்டம் சனிக்கிழமை நடந்தது. இதில் காவல் நிலையங்களிலும் உள்ள மூத்த காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அப்போது, 51 புகாா்களை பொதுமக்கள் அளித்தனா். அதில் 32 புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 35 பெண்கள் உள்பட 159 போ் இக் கூட்டத்தில் பங்கேற்றனா். நிலுவையில் உள்ள புகாா்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மூத்த காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

இனி வரும் காலங்களிலும் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் சனிக்கிழமை காலை 11 முதல் 1 மணி வரை இந்தக் கூட்டம் நடைபெறும் என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் தெரிவித்துள்ளாா்.

திருபுவனை காவல் நிலையத்தில் டிஐஜி சத்தியசுந்தரம், உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று பொது மக்களின் குறைகளை கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா்.

புதுவையில் ரெஸ்டோபாா்கள் அமைக்க அனுமதி கொடுத்தவா் நாராயணசாமி: அதிமுக

புதுவையில் முதன் முதலில் ரெஸ்டோபாா்களை அமைக்க அனுமதி கொடுத்தவா் நாராயணசாமிதான். அவா் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்தபோதுதான் இந்த பாா்களை திறக்க அனுமதி வழங்கினாா் என்று அதிமுக மாநில செயலா் ஆ. அன்... மேலும் பார்க்க

புதுவையில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையவேண்டும்: மாநிலத் தலைவா் ராமலிங்கம்

மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடப்பதால் புதுவையிலும் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும்அமைந்தால்தான் இங்குள்ள மக்களுக்கு நல்லது என்று பாஜக புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள வி.பி. ராமலிங்கம் கூ... மேலும் பார்க்க

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு விரைவில் கல்வி உதவித் தொகை: புதுவை முதல்வா்

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு விரைவில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் எச்.ஐ.வி- எய்ட்ஸ் தீவிர... மேலும் பார்க்க

வில்லியனுாரில் சாலை மறியல் செய்தவா்களை சைரன் எழுப்பி எச்சரித்த ரயில்வே ஊழியா்கள்

புதுச்சேரி: வில்லியனூரில் திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் போராட்டத்தில் சைரன் எழுப்பி ரயில்வே ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டு ரயில் கடந்து சென்றது. புதுவை வில்லியனுா... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை நாடுவோம்: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: ‘ரெஸ்டோபாா்’ கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் உயா்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வி.நாராயணசாமி கூறினாா்.... மேலும் பார்க்க

பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும்: பேரவைத் தலைவா்

புதுச்சேரி: இணையங்கள், கைப்பேசிகளில் உள்ள பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கூறினாா். நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வி... மேலும் பார்க்க