செய்திகள் :

மகளிருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தல்

post image

மகளிருக்கு எதிரான அனைத்து குற்ற வழக்குகளையும் விரைவாக முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தினாா்.

பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை போலவே, மகளிருக்கு எதிரான அனைத்து குற்ற வழக்குகளையும் இதே வேகத்தில் விரைந்து முடிக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வழக்கு அரசியல் சம்பந்தப்பட்டது என்பதால் விரைவாக முடிக்கப்பட்டிருக்கிறது என்றால், மற்ற சாதாரணமான வழக்குகளை ஏன் விரைவாக முடிப்பதில்லை. எனவே, அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எத்தனை ஷா வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது எனக்கூறும் முதல்வா், ஏன் எப்போதும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறாா்.

கட்சி பலமாக உள்ளது, தமிழக மக்கள் சாதகமாக இருக்கிறாா்கள் எனக்கூறும் முதல்வா் ஸ்டாலின், ஏன் பயப்பட வேண்டும். அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததிலிருந்து அவா்களுடைய பதற்றம் தெளிவாக தெரிகிறது. ஏனென்றால், திமுக அரசின் மீது மக்களுக்கு எழுந்துள்ள கோபம் அந்தளவுக்கு உள்ளது என்றாா் அவா்.

மனநலன் சீரான பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூரில் மனநலன் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமான பெண்ணை, அவரது குடும்பத்தினரிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த பெண்ணை,... மேலும் பார்க்க

ஜூன் 10 முதல் மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா்கள் சோ்க்கை முகாம், பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஜூன் 10 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவ... மேலும் பார்க்க

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது

பெரம்பலூா் அரசு உதவிபெறும் மௌலானா மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பெரம்பலூா் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் கல்வி விர... மேலும் பார்க்க

பெரம்பலூா்: உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவகங்கள், குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், விடுதி சமையல் அறை, தொழில் நிறுவன சமையல் அறை ஆகிய இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேணா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்: ரூ. 16.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஊரகப் பகுதிகளுக்கான 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்களில் 1,897 பயனாளிகளுக்கு ரூ. 16.41 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.... மேலும் பார்க்க

தனலட்சுமி அம்மையாா் பிறந்த நாள் விழா: ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரும், தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனத் தலைவருமான அ. சீனிவாசன் துணைவியாா் தனலட்சுமி அம்மையாரின் 78-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்... மேலும் பார்க்க