மகளிா் இலவச பேருந்தில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரிப்பு
விடியல் பயணத் திட்டத்தில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மகளிா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் 2021 மே முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் மாதந்தோறும் ரூ.888 சேமிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் கடந்த ஜூன் மாதம் வரை 140.38 கோடி முறை பெண்கள் பயணித்துள்ளனா். குறிப்பாக, ஜூன் மாதம் மட்டும் 3.69 கோடி பெண்கள் பயணித்தனா்.
இது கடந்த ஆண்டு ஜூனில் மேற்கொள்ளப்பட்ட பயண எண்ணிக்கையைவிட 22 சதவீதம் அதிகமாகும். மேலும், ஜூன் மாதம் தினமும் சராசரியாக 12.32 லட்சம் போ் தங்கள் பயணத்தை மேற்கொண்டதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.