செய்திகள் :

"மகாராஷ்டிரா பள்ளிகளில் மராத்தி மட்டுமே கட்டாயம்; இந்தி கட்டாயமல்ல" - மகா. பாஜக அமைச்சர்

post image

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கையும் தமிழ்நாட்டில் பெரும் விவாதப்பொருளாகியிருந்தது.

கடந்த நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் மும்மொழிக் கொள்கை மற்றும் இந்தித் திணிப்புக்கு எதிராகக் கடும் விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் பி.எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ. 2,000 கோடி நிதியை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் வழங்க முடியாது என்று பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்தி திணிப்பு
இந்தி திணிப்பு

இருப்பினும் தேசியக் கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் நாடுமுழுவதும் கொண்டு வந்தே தீருவோம் என்று பா.ஜ.க தீவிரமாக இருந்தது வருகிறது.

பா.ஜ.க தலைவர்களும், அமைச்சர்களும் மும்மொழிக் கொள்கை, இந்தி கற்றுக் கொள்வதற்கு ஆதரவாகத் தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் கலாசாரா அமைச்சரும், பா.ஜ.க-வின் மும்பை மும்பை பிரிவின் தலைவராகவும் இருந்த ஆஷிஷ் ஷெலர், மகாராஷ்டிரா பள்ளிகளில் மராத்தி மட்டுமே கட்டாயம், இந்தி கட்டாயமாக இருக்கக் கூடாது என்று பேசியிருக்கிறார்.

மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் ஆஷிஷ் ஷெலர்
மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் ஆஷிஷ் ஷெலர்

இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், "5 முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி கற்பிக்க வேண்டும் என்ற முந்தைய கட்டாயத்தை எங்கள் அரசாங்கம் நீக்கியுள்ளது.

அதற்குப் பதிலாக, பல மொழிகளுடன் சேர்ந்து இந்தி மொழியை ஒரு விருப்பத் தேர்வாக வேண்டுமானால் கற்றுக்கொள்ளலாம் என்று கொண்டு வந்திருக்கிறோம்.

இந்தி மற்றும் பிற எந்த மொழியையும் கற்றுக் கொள்வது மாணவர்களின் விருப்பம்தான். ஒருபோதும் இந்தி கற்றுக் கொள்வது கட்டாயமல்ல. பள்ளிகளில் மராத்தி மட்டுமே கட்டாயம். இந்தி கட்டாயமாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

நாங்கள் மராத்தி மொழியின் ஆதரவாளர்கள், அதில் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிரா: ``5-ம் வகுப்பு வரை மும்மொழி கட்டாயம்; இந்தி படிப்பது..'' - பட்னாவிஸ் சொல்வதென்ன?

தேசியக் கல்விக் கொள்கை மகாராஷ்டிராவில் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, மும்மொழி கொள்கையில் மூன்றாவதாக ஏதோவொரு மொழியைக் கற்றுக் கொள்ளலாம் என்றிருந்தநிலையில், இந்தி மொழி மட்டுமே பள்ளிகளில் கட்டாயமாக்கப்படுவது சர்ச்சையாகி, பெரும் விவாதப்பொருளாக வெடித்து வந்தது.

மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-வது வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்று மாநில அரசு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி புதிய அரசாணையும் ஒன்றை வெளியிட்டது.

இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்று கல்வியாளர்களும் தெரிவித்தனர். 

இதையடுத்து 'இந்தி விருப்பப் பாடம் மட்டுமே, கட்டாய பாடம் கிடையாது' என்று மாநில அரசு விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் ஆஷிஷ் ஷெலர் இதுபோன்றதொரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

முதல்வர் ஸ்டாலின் நாளை வேலூர் வருகை... குழப்பியடிக்கும் பல்நோக்கு மருத்துவமனை திறப்புவிழா விவகாரம்!

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை (ஜூன் 25) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 26) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த... மேலும் பார்க்க

Israel - Iran: ``போர்நிறுத்ததை ஏற்றுக் கொள்கிறோம்; அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி, ஆனால்..'' - இஸ்ரேல்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து இருநாடுகளுக்கிடையே போர் சூழும் அபாயம் ஏ... மேலும் பார்க்க

Israel - Iran: ``மீண்டும் தெளிவாக சொல்கிறோம்..'' - போர்நிறுத்தம் குறித்து பேசிய ஈரான்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயிலான மோ... மேலும் பார்க்க

Israel - Iran: போர்நிறுத்தை அறிவித்த ட்ரம்ப்; 12 நாள்களைக் கடந்தும் தொடரும் தாக்குதல்கள்..

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயிலான மோ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நெஞ்சுவலியால் உயிரிழந்த அதிகாரி.. என்ன காரணம்?

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் நேற்று மாலை சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவ... மேலும் பார்க்க

மேற்குவங்க இடைத்தேர்தல் TMC வெற்றிக் கொண்டாட்டத்தில் சிறுமி உயிரிழிப்பு; மம்தா பானர்ஜி வருத்தம்

மேற்கு வங்காளம் - காளிகஞ்ச், கேரளா - நிலம்பூர், குஜராத் - விசாவதர், குஜராத் - கடி, பஞ்சாப் - லூதியானா மேற்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகள் இன்று (ஜூன் 23) வெளியாகின. பஞ்சாப்... மேலும் பார்க்க