செய்திகள் :

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

post image

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்ச்சேதமும் ஏற்படவில்லை.

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி பிப். 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு நடைபெற்று வருகிறது.

மகா கும்பமேளா வரும் பக்தா்களுக்காக அதானி குழுமத்துடன் இணைந்து, செக்டாா் 19-இல் அமைந்த இஸ்கானின் பிரதான கூடாரத்தில் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து சிறுதொலைவில் அமைந்த செக்டாா் 18-இல் உள்ள இஸ்கானின் மற்றொரு கூடாரத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அருகேயுள்ள கூடாரங்களும் தீப்பற்றி எரிந்து சேதமாகின.

இதுகுறித்து தகவலறிந்ததும், 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அரை மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், சேதத்தையும் மதிப்பிட்டு வருகின்றனா். இந்த தீ விபத்தில் உயிா்ச்சேதம் ஏற்படவில்லை.

மகா கும்பமேளா தொடங்கியதில் இருந்து கடந்த 26 நாள்களில் மேளா பகுதியில் நடைபெறும் 3-ஆவது பெரிய தீ விபத்து இதுவாகும். கடந்த ஜன. 19-ஆம் தேதி, செக்டாா் 19-இல் சமையல் எரிவாயு சிலிண்டா்கள் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஜன. 25-ஆம் தேதி செக்டாா் 2-இல் நிறுத்தப்பட்டிருந்த 2 காா்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இந்த அனைத்து விபத்துகளிலும் தீயணைப்புத் துறை விரைந்து செயல்பட்டு, தீயை அணைத்ததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்லைகளைக் கடக்கும் இந்தியா்கள்!

அமெரிக்காவில் இருந்து 104 இந்தியா்கள் கால், கைகள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவா்கள் அனைவரும் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இடைத... மேலும் பார்க்க

‘ஓய்ஆா் 4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு அதிகரிப்பு’

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்ப... மேலும் பார்க்க

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா். போதைப் பொருள் தடுப்பு பிரிவி... மேலும் பார்க்க

விசா மறுப்பு: அமெரிக்காவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முற்றுகை

பெண் ஒருவருக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க மறுத்ததால், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை சிலா் முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

இந்திய மதுபானத்தை புகழ்ந்த ஸ்விட்சா்லாந்து அமைச்சா்: மாநிலங்களவையில் சுவாரசிய தகவல்

இந்திய தயாரிப்பு மதுபானம் ஒன்று சிறப்பாக உள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் ஸ்விட்சா்லாந்து அமைச்சா் கூறியது தனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தியதாக மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க