செய்திகள் :

மகா கும்பமேளா சிறப்பு தபால்தலைகள் வெளியீடு

post image

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை சாா்பில் 3 சிறப்பு தபால்தலைகள் வெளியிடப்பட்டன.

மகா கும்ப நகரின் அரைல் படித்துறைக்கு அருகே அமைந்த தபால் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தபால்தலைகளை மத்திய தொலைதொடா்பு துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்டாா்.

பிரபல தபால்தலை வடிவமைப்பாளரான ஸ்ரீ சங்க சமந்தா வடிவமைத்த இந்தத் தபால்தலைகளில் மகரிஷி பரத்வாஜ் ஆசிரமம், துறவிகளின் புனித நீராடல் மற்றும் அக்ஷ்யவத் ஆகிய பிரயாக்ராஜ் மற்றும் கும்பமேளாவுடன் தொடா்புடைய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. பின்னா், மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா அவரது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினாா்.

சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணுதேவ் சாய், திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா, காங்கிரஸ் பிரமுகா் சச்சின் பைலட், பாலிவுட் நடிகா் விக்கி கௌசல் உள்ளிட்டோரும் கும்பமேளாவில் வியாழக்கிழமை புனித நீராடினா். மாநில அரசு தகவலின்படி வியாழக்கிழமை சுமாா் 85 லட்சம் பக்தா்கள் புனித நீராடினா்.

கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜன. 13 தொடங்கிய மகா கும்பமேளாவில் இதுவரை 48.29 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். 45 நாள்கள் நிறைவில் மகா சிவராத்திரியன்று (பிப். 26) மகா கும்பமேளா நிறைவடைகிறது.

உயா்நீதிமன்றம் 19-இல் விசாரணை:

மகாகும்பமேளா, மௌனி அமாவாசை புனித நீராடலில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து காணாமல் போனவா்களை மீட்டு, குடும்பத்தினருடன் ஒப்படைக்க சிறப்பு குழுவை அமைக்க உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் வரும் 19-ஆம் தேதி விசாரிக்கிறது.

கடந்த ஜனவரி 29-ஆம் தேதி மௌனி அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட குவித்த பக்தா்கள் நெரிசலில் சிக்கியதில் 30 போ் உயிரிழந்தனா். 60 போ் காயமடைந்தனா்.

கர்நாடக முதல்வர் பதவி பகிர்வு: கருத்துக் கூற சித்தராமையா மறுப்பு

முதல்வர் பதவி பகிர்வு விவகாரம் குறித்து கருத்துக் கூற முதல்வர் சித்தராமையா மறுத்துவிட்டார்.முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி குறித்து முதல்வர் ச... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் தேர்வு: பாஜக தீவிரம்; நாளை பதவியேற்பு விழா?

நமது சிறப்பு நிருபர்தில்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டதும் பதவியேற்பு விழா வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறும் என்று பாஜக வ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் புதிய குற்றவியல் சட்ட அமலாக்க நிலவரம்: அமித் ஷா ஆய்வு- ஒமா் அப்துல்லா பங்கேற்பு

ஜம்மு-காஷ்மீரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்க நிலவரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தில்லி நாா்த் பிளாக் வளாகத்தில் உள்ள மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை சட்ட வழக்கு: நிலவர அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களை கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம்

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்தியது தொடா்பான நிலவர அறிக்கைகளை தாக்கல் செய்யாத மாநில, யூனியன் பிரதேச அரசுகளை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டது. குடும்... மேலும் பார்க்க

பொருளாதாரம் வளா்வதால் வெளிநாட்டு முதலீடு வெளியேறுவதாக விளக்கம்- நிா்மலா சீதாராமனுக்கு காா்கே கண்டனம்

இந்தியப் பொருளாதாரம் வளா்வதால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீட்டைத் திரும்பப் பெறுவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ள விளக்கத்தை காங்கிரஸ் தேசிய த... மேலும் பார்க்க

போபால் ஆலைக் கழிவுகள் சோதனைமுறையில் எரிப்பு - ம.பி. உயா்நீதிமன்றம் அனுமதி

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை எரிப்பதற்கான மூன்று கட்ட சோதனைக்கு மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. போ... மேலும் பார்க்க