செய்திகள் :

மக்களவையில் நிறைவேறிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; தண்டனை, ஆணையம், இ-ஸ்போர்ட்ஸ்.. 5 முக்கிய அம்சங்கள்!

post image

ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025-ஐ (Promotion and Regulation of Online Gaming Bill, 2025) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

அப்போது, எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பவே, சபாநாயகர் ஓம் பிர்லா, "இவ்வளவு முக்கியமான மசோதாவைப் பற்றி விவாதிக்க நீங்கள் விரும்பவில்லையா?" என்று கேள்வியெழுப்பினார்.

Promotion and Regulation of Online Gaming Bill, 2025 - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
Promotion and Regulation of Online Gaming Bill, 2025 - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இருப்பினும் கோஷங்கள் தொடரவே, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் நாளையோடு முடிவடையும் நிலையில், மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறும் பட்சத்தில், அடுத்ததாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமாக மாறும்.

1. ஆன்லைன் சூதாட்ட (பணம் கட்டி விளையாடுதல்) விளையாட்டுகளுக்கு தடை:

திறன், வாய்ப்பு அல்லது இந்த இரண்டின் அடிப்படையிலான எந்தவொரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் முற்றிலும் தடை.

இந்த விளையாட்டுகளை எந்த வகையான ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தவோ முடியாது.

மேலும், ஆன்லைன் சூதாட்ட செயலிகளுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி மற்றும் இதர பணப்பரிமாற்ற நடைமுறைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படும்.

நாட்டில் தற்போது செயல்பாட்டிலுள்ள ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் கீழ் தடுக்கப்படும்.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

2. ஆன்லைன் கேமிங் ஆணையத்தை நிறுவுதல்:

ஆன்லைன் விளையாட்டு செயலிகள் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க தேசிய ஆன்லைன் கேமிங் ஆணையத்தை அமைக்க இந்த மசோதா முன்மொழிகிறது. இதன் செயல்பாடுகள்...

* ஆன்லைன் விளையாட்டுகளை வகைப்படுத்துதல் மற்றும் பதிவு செய்தல்.

* ஒரு விளையாட்டு சூதாட்ட விளையாட்டாகத் தகுதி பெறுகிறதா என்பதைத் தீர்மானித்தல்.

* ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளைக் கையாளுதல்.

* ஆன்லைன் விளையாட்டுகள் நாட்டின் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்கள், உத்தரவுகள் மற்றும் நடைமுறைக் குறியீடுகளை வெளியிடுதல்.

3. குற்றங்கள் மற்றும் அபராதங்கள்:

* ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் அல்லது அதற்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ. 1 கோடி வரை அபராதம் அல்லது இவையிரண்டும்.

* ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளம்பரப்படுத்தினால் ரூ. 50 லட்சம் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

* ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பான எந்தவொரு நிதி பரிவர்த்தனைக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 1 கோடி வரை அபராதம் அல்லது இவையிரண்டும்.

* மீண்டும் அதே குற்றம் செய்தால் 3 முதல் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையோடு, ரூ. 2 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.

சிறை
சிறை

4. சமூக (Social) மற்றும் கல்வி விளையாட்டுகளை ஊக்குவித்தல்:

ஆன்லைன் சமூக விளையாட்டுகளை அங்கீகரிக்கவும், வகைப்படுத்தவும், பதிவு செய்யவும் அரசை இந்த மசோதா அனுமதிக்கிறது.

பாதுகாப்பான, வயதுக்கு ஏற்ற சமூக மற்றும் கல்வி சார்ந்த விளையாட்டுகளை உருவாக்குதல் மற்றும் விநியோகிப்பதற்கான தளங்களை உருவாக்குவதன் மூலம் இது கொண்டு வரப்படும்.

இதில் இந்தியாவின் விழுமியங்களுடன் இணைந்த கலாச்சார மற்றும் கல்வி விளையாட்டுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இ-ஸ்போர்ட்ஸ்
இ-ஸ்போர்ட்ஸ்

5. இ-ஸ்போர்ட்ஸ் (e-sports) ஊக்குவித்தல் மற்றும் அங்கீகரித்தல்:

இ-ஸ்போர்ட்ஸ் இந்தியாவில் சட்டப்பூர்வ போட்டியாக அங்கீகரிக்கப்படும்.

இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகளை நடத்துவதற்கும், பயிற்சி அகாடெமிகள், ஆராய்ச்சி மையங்கள், தொழில்நுட்ப தளங்கள் ஆகியவற்றை நிறுவுவதற்கும் மத்திய விளையாட்டு அமைச்சகம் வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகளை உருவாக்கும்.

ஊக்கத் திட்டங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் விளையாட்டுக் கொள்கையில் இ-ஸ்போர்ட்ஸை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றையும் இம்மசோதா வழங்குகிறது.

தேர்தல் ஆணையம்: `தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம்!?' - இந்தியா கூட்டணியின் திட்டம் சாத்தியமா?

ராகுல் காந்தி குற்றச்சாட்டுஇந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றியிருப்பதாக இந்தியா கூட்டணி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது. அதில் மிக முக்கியமானது தேர்தல் ஆணை... மேலும் பார்க்க

``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்திய அரசு அதிரடி

இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கலை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் முக்கியமாக பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக... மேலும் பார்க்க

இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; என்னென்ன மசோதாக்கள், அவை எதற்காக?

3 முக்கிய மசோதாக்கள்இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கலை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. குற்றங்களில் ஈடுபடும் பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோரை பதவி நீ... மேலும் பார்க்க

TVK: தவெக மாநாட்டு பேனரில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் ஏன்? - தவெக நிர்மல்குமார் பதில்

மதுரை தவெக மாநாடுமதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நாளை ஆகஸ்ட் 21-ம் தேதி நடக்கவுள்ளது. 500 ஏக்கரில் மாநாட்டுக்கான திடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 லட்சம் தொண்டர்க... மேலும் பார்க்க

₹33,000 கோடி சந்தையை கட்டுப்படுத்தப் போகும் சட்டம்; `ஆன்லைன் கேமிங் மசோதா' - ஏன்? எதற்காக?

ஆன்லைன் கேமிங்இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை வேகமாக வளர்ந்து வரும் சூழலில், பணவிளையாட்டுகள் மூலமாக சமூக - பொருளாதார சிக்கல்கள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு, மத்திய அரசு ‘ஆன்லைன் கேமிங் ஊக்குவிப... மேலும் பார்க்க

``கூட்டணி அழுத்ததால் நம்பி நிற்கும் மக்களுக்கு அநீதி இழைக்கிறார் திருமா!" - NTK வெண்ணிலா தாயுமானவன்

"தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்கள் போராட்டத்தையும் பேச்சுவார்த்தையும் முன்னெடுத்த நிலையில் அது தோல்வியில் முடிந்திருக்கிறதே!""தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கையாள்வதில் தி.மு.க அரசுதான் அப்பட்டமாக த... மேலும் பார்க்க