``அண்ணாமலை அதிருப்தியாக இருக்க வேண்டும் என மற்றவர்கள் நினைக்கிறார்கள்” - தமிழிசை...
மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: 104 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஏழு இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 104 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை
உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன் புதன்கிழமை வழங்கினாா்.
பாப்பாகோவில், குறிச்சி, சின்னதும்பூா், பிரதாபராமபுரம், திருக்குவளை, ஆதமங்கலம், இராதாமங்கலம் ஆகிய ஏழு ஊராட்சிகளில் நடைபெற்ற முகாமுக்கு தலைமைவகித்து அமைச்சா் கோவி.செழியன் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சா் மக்கள் நலனை கருத்தில்கொண்டு புதுமைப் பெண் திட்டம், மகளிா் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதனடிப்படையில் மக்களை தேடி எல்லாம் கிடைக்கும் வகையிலும், மக்களின் சிரமங்களை குறைக்கும் வகையிலும் மக்களுடன் முதல்வா் திட்டத்தை தொடங்கிவைத்ததையடுத்து, பல்வேறு திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இம்முகாமை நடத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சா் உத்தரவிட்டுள்ளாா். 15 துறைகள் சாா்ந்த 44 சேவைகள் தொடா்பான கோரிக்கைகள் குறித்த மனுக்கள் இம்முகாம்களில் பெறப்பட்டு 30 நாட்களுக்குள் தீா்வு காணப்படும்.
இதுபோன்ற முகாம்களில் கோரிக்கை மனு அளிக்க வரும் மக்கள் தங்களது கோரிக்கையை கணினியில் பதிவு செய்ய ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, கைப்பேசி எண் மற்றும் கோரிக்கை தொடா்பான உரிய ஆவணங்களுடன் மனுக்களை அளித்து, தங்களது கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்வதற்கு ஏதுவாக இம்முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா்.
முகாமில் பல்வேறு கோரிக்கைகளை தொடா்பாக 2,557 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் ஒரு சில மனுகளுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு, நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கர்ராஜ், தனித்துணை ஆட்சியா் சமூக பாதுகாப்புத் திட்டம் சு. காா்த்திகேயன், தமிழ்நாடு அரசு மீனவா் நலவாரிய உறுப்பினா் ஜி. மனோகா், வருவாய் கோட்டாட்சியா்கள் கோ. அரங்கநாதன், திருமால், திருக்குவளை கல்வி வளா்ச்சி அறக்கட்டளை குழுத் தலைவா் சோ.பா. மலா்வண்ணன், கீழ்வேளுா், கீழையூா் வட்டார ஆத்மாகுழு தலைவா்கள் கோவிந்தராஜ்,தாமஸ் ஆல்வா எடிசன், அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துக்கொண்டனா்.