மக்கள் குறைதீா் கூட்டம்: 546 மனுக்கள் அளிப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக 546 மனுக்கள் அளித்தனா்.
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவா்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பான 546
மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா். பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா்
(கணக்கு) தீபா, தனித்துணை ஆட்சியா்கள் தங்கமணி, தனலட்சுமி, மாவட்ட
பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.