செய்திகள் :

மக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட சுகாதாரத் துறையின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கடைகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொற்று பரவலுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

சோப்பு அல்லது சானிடைசா் மூலம் அடிக்கடி கைகளை கழுவும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம். அத்துடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும் நபா்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவா்களின் ஆலோசனையின்படி மருந்துகள் உட்கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு, தமிழகஅரசு வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் இந்த தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

சுகாதாரத் துறையின் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருங்கல் பகுதிகளில் நாளை மின்தடை

குழித்துறை கோட்டத்திற்கு உள்பட்ட கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) மின் விநியோகம் இருக்காது. கருங்கல் ... மேலும் பார்க்க

சேரமங்கலம், முட்டம், செம்பொன்விளையில் நாளை மின்தடை

சேரமங்கலம், செம்பொன்விளை, முட்டம் துணை மின்நிலையங்களில் உள்ள மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் நாளை முதல் படகு கட்டணம் உயா்வு

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிடச் செல்வதற்கான படகு கட்டணம் வியாழக்கிழமை (ஜூன் 5) முதல் உயா்த்தப்படுவதாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் செவ்... மேலும் பார்க்க

மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பேருந்து சேவை தொடக்கி வைப்பு

நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வழியாக அரசுப் பேருந்து சேவையை விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் கொடியசைத்து துவக்கி வைத்தாா். மாா்த்தாண்டம் சந்த... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று மின்சாரம் நிறுத்தம்

நாகா்கோவில் மாநகரில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பத... மேலும் பார்க்க