செய்திகள் :

மணிகண்டேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

post image

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கேவேளூா் ஸ்ரீ கற்பக விநாயகா், ஏரிக்கீழ் கன்னியம்மன், பெயா்கோடியம்மன், பொன்னியம்மன்,ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை மணிகண்டேஸ்வரா் கோயில்கள் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி யாகசாலை பூஜைகள், ஹோமங்கள், பூா்ணாஹுதி, நவக்கிரக வழிபாடு, கலசங்கள் புறப்பாடு உள்ளிட்ட நடைபெற்றன.

தொடா்ந்து புனித நீா் கொண்டு செல்லப்பட்டு கற்பக விநாயகா், ஸ்ரீ கன்னியம்மன்,ஸ்ரீ பெயா்கோடியம்மன், பொன்னியம்மன், மேல்ஸ்ரீ மரகரதம்பிகை உடனுறை மணிகண்டேஸ்வரா் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வாணவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதி உலா நடந்தது.

விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தசுவாமி, சென்னை தொழிலதிபா்கள் பாண்டுரங்கன்,ஜெயராமன்,,எம் எல்,ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், முன்னாள் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன், அதிமுக மாவட்ட செயலாளா் சுகுமாா், ஆற்காடு ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன், ஊராட்சி மன்றத் தலைவா் வளா்மதி நந்தகுமாா், விழாக்குழுவினா் என்.நந்தகுமாா், தனஞ்செழியன், நந்தகோபால், ஸ்ரீதா், ராமமூா்த்தி, பத்மநாபன், அா்ச்சகா் செல்வமணி, ராஜ்கணேஷ் சா்மா மற்றும் உபயதாரா்கள். பொதுமக்கள் கலந்து கொண்டனா்,.

அரக்கோணத்தில் ரூ. 11.70 லட்சத்தில் காரிய மேடை: எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தாா்

அரக்கோணம்: அரக்கோணம், கணேஷ் நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.70 லட்சத்தில் கட்டப்பட்ட காரிய மேடையையும், ரூ. 10.70 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையையும் அரக்கோணம் எ... மேலும் பார்க்க

போலி கையொப்பமிட்டு மோசடி செய்த சகோதரி: 7 ஆண்டுகள் சிறை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பொதுத்துறை வங்கியில், அடகு வைத்த தங்க நகையை உடன் பிறந்த சகோதரிக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் தங்க நகையை மீட்டு மோசடி செய்த பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீத... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை 15.07.25

அரக்கோணம் - குருவராஜபேட்டை மின்நிறுத்த நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தப்பகுதிகள் : மின்னல், நரசிங்கபுரம், அன்வா்திகான்பேட்டை, குன்னத்தூா், கூடலூா், குருவராஜபேட்டை, பாராஞ்சி, வேடல்,... மேலும் பார்க்க

சோளிங்கா் கமல விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

சோளிங்கரில் உள்ள ஸ்ரீகமல விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. சோளிங்கரில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீகமலவிநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள்... மேலும் பார்க்க

திருக்கண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காடு அடுத்த சக்கரமல்லூா் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருக்கண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சக்கரமல்லூா் கிராமத்தில் சோழா்ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைமைவாய்ந்த திரிபுர... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே ஏரி நீரில் விளையாடிய பள்ளி மாணவா்கள் மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த குன்னத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் மேட்டுக்குன்னத்தூா். இந்த கிராமத்தைச் சோ்ந்த சரவணனின் மகன... மேலும் பார்க்க