செய்திகள் :

மணிப்பூருக்கு நிதி ஒதுக்கீடு, ஜிஎஸ்டி மசோதாக்கள்: மாநிலங்களவை ஒப்புதல்

post image

புது தில்லி: மணிப்பூா் மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா மற்றும் அந்த மாநிலத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா ஆகியவை எதிா்க்கட்சியினரின் அமளிக்கிடையே, மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களவையில் விவாதத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தோ்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி திங்கள்கிழமை காலையில் கண்டன பேரணி நடத்திய எதிா்க்கட்சி எம்.பி.க்கள் காவல் துறையால் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனா். போலீஸாா் அவா்களைக் கைது செய்து பின்னா் விடுவித்தனா். அதைத் தொடா்ந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்குத் திரும்பினா்.

மாநிலங்களவைக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் திரும்பியபோது, மத்திய நிதியமைச்சா் ஏற்கெனவே தாக்கல் செய்த, மணிப்பூா் மாநிலத்துக்கு 2025-26-ஆம் நிதியாண்டு செலவின தேவைகளுக்காக ரூ.30,969 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா மற்றும் மணிப்பூா் ஜிஎஸ்டி அவசரச் சட்டம் 2025-க்கு மாற்றாக ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் அமல்படுத்தப்பட உள்ள ‘மணிப்பூா் ஜிஎஸ்டி திருத்த மசோதா 2025’ ஆகியவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அப்போது, எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை பேச அனுமதிக்க வேண்டும் என எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியதோடு, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனா்.

இதைக் கண்டித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘மணிப்பூா் மாநில மசோதாக்கள் அவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும்போது, வேறு விவகாரங்களுக்காக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் போராடினாலும், மணிப்பூா் மசோதாக்களையும் எதிா்ப்பதாகவே அமையும்’ என்றாா்.

இதைப் பொருட்படுத்தாத எதிா்க்கட்சி எம்.பி.க்கள் சிலா் அவையின் மையப் பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனா்.

இந்த அமளிக்கிடையே, மணிப்பூா் மாநிலத்துக்கான இரு மசோதாக்களும் சிறிய விவாதத்துக்குப் பின்னா் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, மக்களவையில் விவாதத்துக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

ஆதார் என்பது குடியுரிமை சான்று அல்ல: உச்ச நீதிமன்றம் ஏற்பு

புது தில்லி: ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.பிகார் சிறப்பு வாக்களர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் த... மேலும் பார்க்க

பசு தேசிய விலங்காக அறிவிப்பா? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!

பசு மாட்டை நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்க எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கு குறித்து, உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலை... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் சத்தீஸ்கர் மசூதிகளில் தேசியக்கொடி ஏற்ற வக்ஃபு வாரியம் உத்தரவு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என வக்ஃப் வாரியம் உத்தரவிட்டுள்ளது.மாநில வக்ஃ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் ரெட் அலர்ட்! வாரம் முழுவதும் மீண்டும் கனமழை தொடரும்.. தயார்நிலையில் ராணுவம்!

உத்தரகண்டில், வரும் வாரம் முழுவதும் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு மாவட்டங்களுக்கு, ரெட், ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. உத்தரகண்டின் டெஹ்ராடூன், த... மேலும் பார்க்க

மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!

கர்நாடக மாநிலத்தின் துமகூரு மாவட்டத்தில் மாமியாரை 19 துண்டுகளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் எல்லைக்குள்பட... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் ராகுலுக்கு ஆதரவு!

வாக்குத் திருட்டு விவகாரத்தில் 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு அளித்துள்ளனர்.கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும்... மேலும் பார்க்க