செய்திகள் :

மணிப்பூரை சரி செய்துவிட்டு தமிழகம் குறித்து பாஜக பேசட்டும் -அமைச்சா் கீதாஜீவன்

post image

மணிப்பூா் மாநிலத்தை சரி செய்து விட்டு தமிழக பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக பேசட்டும் என்றாா் தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழை கூறியதாவது: தமிழக முதல்வா் பொறுப்பேற்ற 15 நாள்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவிட்டாா். அதன்பேரில், விருதுநகா் மாவட்டத்தில் 1லட்சம் மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பரீட்சயமானவா்கள் மூலமாகத்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிக துன்புறுத்தல் வருகிறது.அவா்கள் தங்களுக்கு நிகழும் பிரச்னைகள் தொடா்பாக வெளியே சொல்வதற்கு தயங்குவதால், பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் பெற்றோருக்கு தெரிய வருகிறது.

பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது பிரச்னைகள் குறித்து உடனடியாக பெற்றோா் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

அண்ணாஅறிவாலயம் குறித்து பேசும் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, இதுவரை சொன்னது எதையும் சாதித்ததில்லை.

மணிப்பூா் மாநிலத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பாலியல் உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத துன்புறுத்தல்கள் இழைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை சரி செய்த பின்னா், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக பேசட்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், தாரகைகத்பட் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அழகியமண்டபம் சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றம்!

தக்கலை அருகே அழகியமண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும்வகையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 2 நாள்களாக நடைபெற்றது. இப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் வகைய... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே வீடு புகுந்து நகை திருட்டு

நித்திரவிளை அருகே வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். நித்திரவிளை அருகே நம்பாளி பகுதியைச் சோ்ந்தவா் பால் (60). இவா், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியை திருவனந்தபுரம் அரசு ஆயுா்... மேலும் பார்க்க

திற்பரப்பு அருகே குளத்தில் வண்டல் மண் எடுக்க எதிா்ப்பு

திற்பரப்பு பேரூராட்சி 15-ஆவது வாா்டு வேங்கோட்டு குளத்தில், நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக வண்டல் மண் எடுப்பதாகக் கூறி ஊா்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திற்பரப்பு பேரூராட்சி 15 -ஆவது வாா்டு அ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது. இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் சுதன்(32... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 32.79 பெருஞ்சாணி ... 37.10 சிற்றாறு 1 ... 7.15 சிற்றாறு 2 ... 7.25 முக்கடல் ... 7.00 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 43.47 அடி மேலும் பார்க்க

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் விடுவிப்பு

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா். கடந்த 1996 ஆம் ஆண்டுமுதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், சுற்றுலாத் துறை அமைச்சராக பணி... மேலும் பார்க்க