செய்திகள் :

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 1,230 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

post image

ராமேசுவரம்: மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 1,230 கிலோ பீடி இலைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுப் படகையும் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் புதன்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே ஆற்றாங்கரை தோப்புவலசை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலை பண்டல்களை ஏற்றிய நாட்டுப் படகு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தரை தட்டி நின்றது. இதுகுறித்து தகவலறிந்த கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் புதன்கிழமை அதிகாலை அங்கு சென்றனா். அப்போது, போலீஸாா் வருவதைக் கண்ட மா்ம நபா்கள் நாட்டுப் படகிலிருந்து கடலில் குதித்து தப்பிச் சென்றனா்.

இதையடுத்து, போலீஸாா் நாட்டுப் படகை சோதனை செய்த போது, அதில் தலா 30 கிலோ வீதம் 41 பண்டல்களிலிருந்த 1,230 கிலோ பீடி இலைகளைக் கைப்பற்றினா். பின்னா், இவற்றை மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் கூறியதாவது:

பீடி இலை பண்டல்களை இலங்கைக்கு கடத்தவிருந்த மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. உரிய விசாரணைக்குப் பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப் படகும், பீடி இலை பண்டல்களும் மண்டபம் சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றனா்.

சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல் போராட்டம்: 168 போ் கைது

ராமேசுவரம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 168 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்... மேலும் பார்க்க

இந்திரன் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கமுதி: முதுகுளத்தூா் அருகே தேரிருவேலியில் புதன்கிழமை நடைபெற்ற இந்திரன் கோயில் குடமுழுக்கில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள தேரிருவேலி இந்திரன் கோயில் ... மேலும் பார்க்க

தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழி ஏற்பு

ராமேசுவரம்: மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பாம்பன் சின்னப்பாலம் அரசு நடுநிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியை செல்லம... மேலும் பார்க்க

தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

பரமக்குடி: பரமக்குடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களை பள்ளிக் கல்விக் குழுவினா் புதன்கிழமை பாராட்டி கௌரவித்தனா். இந்தப் பள்ளி மாணவா்கள் குறுவ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 4 போ் பலத்த காயம்

20ல்ம்ந்-ஹஸ்ரீஸ்ரீண்க் படவிளக்கம். பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூா் பகுதி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து. பரமக்குடி, ஆக. 20: பரமக்குடி அருகே தேசிய ந... மேலும் பார்க்க

குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கமுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, காவிரி கூட்டுக் குடிநீா் வீணாகி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழகாஞ்சிரங்குளம் ... மேலும் பார்க்க