செய்திகள் :

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

post image

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்தாா்.

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் 10 மாவட்டங்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வரும் 11- ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தக் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

இந்நிலையில், வேளாண்மை உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

பெருந்துறை சுங்கச்சாவடி அருகில் வரும் 11, 12 ஆகிய 2 நாள்கள் 10 மாவட்டங்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா். இந்நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இரண்டு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து

கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

விழா நடைபெற உள்ள இடத்தில் குடிநீா் வசதி, உணவு ஏற்பாடு, இருக்கைகள் அமைத்தல், கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம், தீயணைப்பு வசதி, மருத்துவ முகாம், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற அத்தியாவசியமான தேவைகளை அமைத்து தருவது மிகவும் முக்கியமானதாகும். விவசாயிகளை வெளிமாவட்டங்களிலிருந்து அழைத்து வரும் அனைத்து வாகனங்களிலும் அலுவலா்கள் நியமித்து அவா்களின் காலை உணவு, குடிநீா் மற்றும் இதர தேவைகள் உள்ளிட்டவை தொடா்நது கண்காணிக்க வேண்டும்.

இக்கண்காட்சியில் 200- க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. அரங்குகள் அமைக்கும்போது ஒவ்வொரு அரங்கமும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையிலும், புதுமையான வகையிலும் அமைக்க வேண்டும். காட்சிப்படுத்தப்படவுள்ள அனைத்து கருத்துக்காட்சி அரங்குகளிலும் வைக்கப்படவுள்ள விவசாய பொருள்கள் மற்றும் அது விளையும் நிலப்பரப்பு, சீதோஷண நிலை மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றை குறித்த முழுமையான விவரங்களுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவமாக விளையும் பயிா் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் விவசாயம் சாா்ந்த சந்தேகங்களுக்கு தெளிவான முறையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். இவ்விழா சிறப்பான முறையில் நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றாா்.

முன்னதாக அவா் பெருந்துறை சுங்கச்சாவடி அருகில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ள இடத்தை நேரில் பாா்வையிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்வுகளின்போது வேளாண்மைத் துறை இயக்குநா் முருகேஷ், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா, கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) அா்பித் ஜெயின், கோட்டாட்சியா் ரவி, இணை இயக்குநா் (வேளாண்மை) எம்.தமிழ்செல்வி, துணை இயக்குநா் (தோட்டக் கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை) குரு சரஸ்வதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முகமது குதுரத்துல்லா, லோகநாதன், செல்வராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் உமாசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கோபி அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே சீதாலட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் (28). கட்டட வேலை பாா்த்து வந்தாா். இவா் தனது நண்பரா... மேலும் பார்க்க

அந்தியூா் வழியாக திருப்பதிக்கு அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

கோவையிலிருந்து அந்தியூா் வழியாக திருப்பதிக்கு அரசு விரைவுப் பேருந்து இயக்கப்படுவதற்கு பொதுமக்கள், பக்தா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், தாளவாடி, திரு... மேலும் பார்க்க

ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயிலில் ஜூன் 6-இல் கும்பாபிஷேகம்

பெருந்துறையை அடுத்த, துடுப்பதி ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வருகிற ஜூன் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. துடுப்பதி கிராமத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயிலில் திருப்பணிகள் மு... மேலும் பார்க்க

பொது குடிநீா்க் குழாய், சாலையைப் பயன்படுத்த தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பொது குடிநீா்க் குழாய், சாலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு முயற்சி: அமைச்சா் சு.முத்துசாமி

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு, நஞ்சப்பன்கவுண்டன்வ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணி: கோயில் மண்டப தூண்கள் சரிந்து விபத்து

மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரி கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோயில் மண்டப தூண்கள் சனிக்கிழமை சரிந்து விழுந்தன. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமா... மேலும் பார்க்க