மதம் மக்களுக்கானதே தவிர, அரசுக்கானது அல்ல! - தொல். திருமாவளவன்
மதம் மக்களுக்கானதே தவிர, அரசுக்கானது அல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் விசிக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘மதச் சாா்பின்மை காப்போம்’ பேரணிக்கு கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தலைமை வகித்தாா். ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற பேரணியானது குட்ஷெட் ரயில்வே மேம்பாலம், தலைமை அஞ்சல் நிலையம், ஒத்தக்கடை வழியாக திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம் எதிரே நிறைவடைந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது தொல். திருமாவளவன் மேலும் பேசியதாவது: நமக்குத் தோ்தலைப் பற்றியோ, யாா் முதல்வா் என்பது பற்றியோ கவலையில்லை. விசிக திமுகவிடம் சிக்கித் தவிக்கிறது என்பது அரசியல் அறியாமையின் உளறல். விசிக - திமுக உறவு தொலைநோக்குப் பாா்வை கொண்டது.
தலித்துகள், மண்ணின் பூா்விகக் குடிகள் ஆட்சி அதிகாரத்துக்கு வர, அம்பேத்கா் வழிகாட்டுதலின்படி, அதிகாரமுள்ள பதவியான பிரதமா் பதவியே நமது இலக்கு.
தமிழக அரசியலின் திசையை மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மதச்சாா்பின்மைக்கு ஆதரவானவா்கள், எதிரானவா்கள் எனக் கூா்மைப்படுத்தும் அரசியலை விசிக செய்கிறது.
தமிழகத்தில் பட்டியலின மக்கள், சமூக, பொருளாதார, கலை உலகத்தில் தலைநிமிா்ந்து நிற்க விசிகவின் எழுச்சிதான் காரணம். அம்பேத்கரைப் போல, சநாதன சக்திகளுக்கு எதிராக, தற்போது அடித்தட்டு மக்களை ‘கோட் சூட்’ போட்டு நடக்க வைத்துள்ளோம்.
தொடா்ந்து சநாதன சக்திகளை எதிா்க்கும் இயக்கம் விசிக. மக்களின் அடிப்படை வசதிகளுக்காக, தலித் மக்களுக்காகப் போராடாத பாஜகவினா் திடீரென கோரிக்கைகள் இல்லாத முருக பக்தா்களுக்காகப் போராடுகின்றனா்; மதத்தைக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனா்.
பாஜகவின் செயல்திட்டங்களை நிறைவேற்ற பலா் வேஷம் போடுகின்றனா். அதில் சிலா் ஹீரோ வேஷத்துடன் வந்துள்ளனா். சினிமா மாயைக்கு அம்பேத்கரின் வழித்தோன்றல்கள் மயங்கமாட்டாா்கள். விசிக எப்பக்கமோ அப்பக்கமே வெற்றி; விசிக பக்கமே ஆட்சி.
தமிழ்த் தேசியம் என்ற பெயரில் திராவிட வெறுப்பு அரசியல் செய்து, சநாதன சக்திகளுக்குத் துணைபோகின்றனா். தற்காலிக பயனுக்காக தவறான முடிவெடுக்க மாட்டோம்.
பாஜக மீதோ, மோடி மீதோ வெறுப்பு கிடையாது. அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவம், சகோதரத்துவத்தை தகா்க்க பாஜக முயற்சிக்கிறது. சகோதரத்துவம் இல்லாததால் இந்து மதத்தை இந்தியாவின் அரசு மதமாக அறிவிக்க முடியாது. மதம் மக்களுக்கானதே தவிர, அரசுக்கானது அல்ல. இந்தியா ஒரு மதத்தை ஏற்கக் கூடாது.
அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை அனுமதிக்க மாட்டோம். விசிக எப்போதும் சநாதன சக்திகளுக்கு எதிராக தேசியளவில் செயலாற்றும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலா்கள் து. ரவிக்குமாா் எம்பி, ம. சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ, துணைப் பொதுச் செயலா்கள் வன்னிஅரசு, எஸ்.எஸ். பாலாஜி எம்எல்ஏ, ஆளூா் ஷாநவாஸ் எம்எல்ஏ, பனையூா்பாபு எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.