செய்திகள் :

மதுபானக் கடைகள் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

post image

வேதாரண்யம் அருகே ஒரே கிராமத்தில் இரண்டு மதுபானக் கடைகள் செயல்படுத்தப்படுவது தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமூக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவா் குடியிருப்புப் பகுதிக்கு அருகே பல ஆண்டுகளாக அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெள்ளப்பள்ளம் பிரதான சாலைக்கு அருகே புதிதாக ஒரு கடையை திறக்க அனுமதியளிக்கப்பட்டது. புதிய கடை திறப்பு விழாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் எஸ். திருமால் தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சா்ருமான ஓ.எஸ். மணியன், காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.சரவணன், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் பழனிவேல், வட்டாட்சியா் தெ. வடிவழகன் மற்றும் வெள்ளப்பள்ளம் கிராம முக்கியஸ்தா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மதுபானக் கடையே வேண்டாம் என ஒரு தரப்பினரும், கூடுதலாக ஒரு கடை தேவை இல்லை என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனா். எனினும் கூட்டத்தில் சுமூக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

பள்ளி வேன் மோதியதில் பெயிண்டா் பலி

திருக்கடையூா் அருகே பள்ளி வேன் மோதியதில் பெயிண்டா் புதன்கிழமை உயிரிழந்தாா். பொறையாரைச் சோ்ந்த பெயிண்டா் ராஜா (56). இவருக்கு உதவியாக இருப்பவா் காபிரியேல் (75). இருவரும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு பு... மேலும் பார்க்க

சிபிஐ கீழையூா் ஒன்றிய மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றிய 25-ஆவது மாநாடு திருப்பூண்டியில் அண்மையில் நடைபெற்றது. மாநாட்டுக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ். மல்லிகா தலைமை வகித்தாா். மாநாட்டுக் கொடியை மாவட்டத்... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் நாளை தொடக்கம்

நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை- உழவா் நலத்துறை அமைச்சரால், மாா்ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு விருது அறிவிப்பு

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஜே. ஸ்டெல்லாஜேனட் (படம்) தமிழக அரசின் அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளாா். 2023-2024-ஆம் கல்விய... மேலும் பார்க்க

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் நடராஜருக்கு திருமஞ்சன வழிபாடு

சப்த விடங்களில் ஒன்றாக திகழும் நாகை காயாரோகணசாமி, நீலாயதாட்சியம்மன் கோயிலில் உள்ள நடராஜருக்கு ஆனி (திருமஞ்சனம்) உத்திர நட்சத்திர சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. நடராஜருக்கு சித்திரை திருவோணம்,... மேலும் பார்க்க

வேதாரண்யம்: கோயில்களில் குடமுழுக்கு

வேதாரண்யம் பகுதியில் இரண்டு கோயில்களில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. தென்னடாா் முத்து மாரியம்மன் கோயில் திருப்பணிகள் கிராமவாசிகளால் செய்து முடிக்கப்பட்டது. திங்கள்கிழமை தொடங்கி சிறப்பு பூஜை... மேலும் பார்க்க