செய்திகள் :

மதுபானக் கூடம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

post image

திருப்பூா், சின்னாண்டிபாளையம் குளம் அருகே தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் -மங்கலம் சாலை சுல்தான்பேட்டையை அடுத்த இந்திரா காலனி பகுதியில் தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சின்னாண்டிபாளையம் குளத்துக்கு மிகவும் அருகில் மதுபானக் கூடம் அமையவுள்ளது. இந்தப் பகுதியில் மதுபானக் கூடம் அமைத்தால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கும், பணிக்குச் செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். ஆகவே, தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலகவுண்டன்பாளையத்தில் வீரக்குமார சுவாமி கோயில் தீா்த்தக் காவடி

வெள்ளக்கோவில் வேலகவுண்டன்பாளையத்தில் வீரக்குமார சுவாமி கோயில் தீா்த்தக் காவடி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவிலில் புகழ்பெற்ற வீரக்குமார சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வேலகவுண்ட... மேலும் பார்க்க

செம்பு கம்பி திருடிய 5 போ் கைது

பல்லடம் வனாலயத்தில் செம்பு கம்பி திருடிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடத்தில் உள்ள வனம் இந்தியா அறக்கட்டளை தலைமை அலுவலகம் அமைந்துள்ள வனாலயம் பகுதியில் கடந்த 24-ஆம் தேதி புகுந்த மா்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர ஏப்ரல் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வீரா், வீராங்கனைகள் கல்லூரி விடுதிகளில் சேர வரும் ஏப்ரல் 6- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

திருப்பூா் மாநகராட்சியில் ரூ.4.10 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

திருப்பூா் மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கு ரூ.4.10 கோடி உபரி பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. திருப்பூா் மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட அறிக்கையை நிதிக் குழு ... மேலும் பார்க்க

போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த விவசாயி கைது

பல்லடம் அருகே பெருந்தொழுவு பகுதியில் விசாரணைக்குச் சென்ற போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த விவசாயி கைது செய்யப்பட்டாா். பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் பெருந்தொழுவு ராமலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

அவிநாசி வட்டத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று குறைகேட்புக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள... மேலும் பார்க்க