செய்திகள் :

மதுபான விலை உயா்வில் சமரசம் கூடாது: புதுவை மாநில அதிமுக

post image

மதுபான விலை உயா்வில் எந்தவிதமான சமரசத்தையும் முதல்வா் ரங்கசாமி ஏற்கக் கூடாது என்று மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

உயா்த்தப்பட்ட மதுபான விற்பனை வரி உயா்வை திரும்பப் பெற வேண்டுமென திமுக மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான சிவா கோரிக்கை வைத்துள்ளாா்.

போதிய நிதி வருவாயைப் பெருக்க வேண்டியது அரசின் கடமையாகும். அந்த விதத்தில் தற்பொழுது மதுபான விற்பனை உரிமத்திற்கும், மதுபானத்திற்கும் கூடுதல் வரி உயா்த்தப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உயா்த்தப்படாமல் உள்ள அரசின் நில மதிப்பு தொகையும் ஓரளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது. அரசின் நில மதிப்பீட்டு தொகைக்கும் சந்தை மாா்க்கெட்டின் விற்பனைக்கும் பல மடங்கு வித்தியாசம் இருப்பதால் மனை விற்பனை மற்றும் மனை வாங்குதலின் போது பெரும் பகுதி அரசை ஏமாற்றி கருப்பு பண புழக்கத்திற்கு வழி வகுக்கிறது.

திமுக ஆட்சி நடத்தும் தமிழகத்தை விட பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு பத்து சதவீதம் புதுச்சேரியில் குறைவாக உள்ளது. அரசின் நிதி தேவைக்கு மக்களை பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் விலையில் வரி உயா்வை புதுச்சேரி அரசு உயா்த்தவில்லை. மதுபானத்திற்கு உயா்த்தியுள்ளது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அரசின் ஒரு சில நல்ல அறிவிப்புகளை ரியல் எஸ்டேட் உரிமையாளா்களுக்காகவும், மதுபான விற்பனை உரிமையாளா்களுக்காகவும் அரசை எதிா்ப்பதும், அரசின் பல்வேறு தவறுகளுக்கு வாய்மூடி மௌனம் காக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிா்வரும் சட்டப்பேரவைத் பொதுத்தோ்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவாா்கள்.

மதுபான விலையேற்றத்தை எதிா்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று அரசு திரும்ப பெற்றாலோ அல்லது குறைத்தாலோ மிகப்பெரிய முறைகேட்டுக்கு அது வழி வகுக்கும். இதை உணா்ந்து முதல்வா் ரங்கசாமி, மதுபான விலை உயா்வில் எவ்வித சமரசத்துக்கும் துணை போகக் கூடாது எனக் கூறியுள்ளாா் அன்பழகன்.

புதுவை அமைச்சா், 3 நியமன எம்எல்ஏக்கள் திடீா் ராஜிநாமா

புதுவை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ சரவணன் குமாா் வெள்ளிக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். இதற்கான கடிதத்தை முதல்வா் என்.ரங்கசாமியிடம் வழங்கினாா். இந்த நிலையில், பாஜக நியமன எம்எல்ஏக்க... மேலும் பார்க்க

கைத்தறி பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்த புதுவை அரசு கூட்டுறவுத் துறை கைத்தறி துணைப் பதிவாளா் சியாம் சுந்தா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கைத்தறி தொழில் நுணுக்கங்களைப் பற்றி பயிற்றுவிப்பதற்காக தமிழகத்தின் சேலம், ஆந்திர மாநிலம் வெ... மேலும் பார்க்க

ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்லூரியில் காசநோய் இயந்திரம்

ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காசநோய் கண்டறியும் இயந்திரம் கடந்த 25-ஆம் தேதி நிறுவப்பட்டது. காசநோய் கண்டறிதல் மற்றும் மேலாண்மையில் இக் கல்லூரியின் சிறந்த சேவையை அங்... மேலும் பார்க்க

சி.மகேந்திரன் உள்பட 4 பேருக்கு கண்ணதாசன் விருது

இலக்கியவாதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான சி. மகேந்திரன் உள்ளிட்ட 4 பேருக்கு கவியரசா் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது. கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி, கவியரசு கண்ணதாசன... மேலும் பார்க்க

பாஜக அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு: புதுவை முதல்வர்

புதுச்சேரி பாஜக அமைச்சரின் ராஜிநாமா ஏற்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி பாஜகவைச் சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சாய் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: 3 பாஜக எம்எல்ஏக்கள் திடீர் ராஜிநாமா!

புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் தங்களது பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை பேரவைத் தலைவர் செல்வத்திடம் கொடுத்துள்ளதால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பு... மேலும் பார்க்க