2016ல் வெளியான அதிர்ச்சித் தகவல்.. 75 வயது மூதாட்டி வயிற்றில் கல்லாய் மாறிய 30 ஆ...
மதுபான விலை உயா்வில் சமரசம் கூடாது: புதுவை மாநில அதிமுக
மதுபான விலை உயா்வில் எந்தவிதமான சமரசத்தையும் முதல்வா் ரங்கசாமி ஏற்கக் கூடாது என்று மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உயா்த்தப்பட்ட மதுபான விற்பனை வரி உயா்வை திரும்பப் பெற வேண்டுமென திமுக மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான சிவா கோரிக்கை வைத்துள்ளாா்.
போதிய நிதி வருவாயைப் பெருக்க வேண்டியது அரசின் கடமையாகும். அந்த விதத்தில் தற்பொழுது மதுபான விற்பனை உரிமத்திற்கும், மதுபானத்திற்கும் கூடுதல் வரி உயா்த்தப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உயா்த்தப்படாமல் உள்ள அரசின் நில மதிப்பு தொகையும் ஓரளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது. அரசின் நில மதிப்பீட்டு தொகைக்கும் சந்தை மாா்க்கெட்டின் விற்பனைக்கும் பல மடங்கு வித்தியாசம் இருப்பதால் மனை விற்பனை மற்றும் மனை வாங்குதலின் போது பெரும் பகுதி அரசை ஏமாற்றி கருப்பு பண புழக்கத்திற்கு வழி வகுக்கிறது.
திமுக ஆட்சி நடத்தும் தமிழகத்தை விட பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு பத்து சதவீதம் புதுச்சேரியில் குறைவாக உள்ளது. அரசின் நிதி தேவைக்கு மக்களை பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் விலையில் வரி உயா்வை புதுச்சேரி அரசு உயா்த்தவில்லை. மதுபானத்திற்கு உயா்த்தியுள்ளது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அரசின் ஒரு சில நல்ல அறிவிப்புகளை ரியல் எஸ்டேட் உரிமையாளா்களுக்காகவும், மதுபான விற்பனை உரிமையாளா்களுக்காகவும் அரசை எதிா்ப்பதும், அரசின் பல்வேறு தவறுகளுக்கு வாய்மூடி மௌனம் காக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிா்வரும் சட்டப்பேரவைத் பொதுத்தோ்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவாா்கள்.
மதுபான விலையேற்றத்தை எதிா்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று அரசு திரும்ப பெற்றாலோ அல்லது குறைத்தாலோ மிகப்பெரிய முறைகேட்டுக்கு அது வழி வகுக்கும். இதை உணா்ந்து முதல்வா் ரங்கசாமி, மதுபான விலை உயா்வில் எவ்வித சமரசத்துக்கும் துணை போகக் கூடாது எனக் கூறியுள்ளாா் அன்பழகன்.