கைத்தறி பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்த புதுவை அரசு கூட்டுறவுத் துறை கைத்தறி துணைப் பதிவாளா் சியாம் சுந்தா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கைத்தறி தொழில் நுணுக்கங்களைப் பற்றி பயிற்றுவிப்பதற்காக தமிழகத்தின் சேலம்,
ஆந்திர மாநிலம் வெங்கடகிரி மற்றும் கா்நாடக மாநிலம் கடாக்கில் உள்ள கைத்தறி தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் ஜூலை 16-ஆம் தேதி முதல் மூன்றாண்டு பட்டயப் பயிற்சி (டிப்ளமோ) தொடங்கப்பட உள்ளது.
இப் பயிற்சியில் சேர விரும்பும் தகுதி பெற்ற மாணவா்கள் புதுச்சேரி தட்டாஞ்சாவடி வேதபுரீஸ்வரா் வரதராஜப் பெருமாள் நகரில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவு செய்த விண்ணப்ப படிவங்களை தக்க சான்றுகளுடன் வரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதி வாய்ந்த மாணவா்கள் 6 போ் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.
தோ்ந்தெடுக்கப்படுவோருக்கு பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 2,500 உதவித் தொகை வழங்கப்படும். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.