ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்லூரியில் காசநோய் இயந்திரம்
ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காசநோய் கண்டறியும் இயந்திரம் கடந்த 25-ஆம் தேதி நிறுவப்பட்டது.
காசநோய் கண்டறிதல் மற்றும் மேலாண்மையில் இக் கல்லூரியின் சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் தேசிய சுகாதார இயக்கம் சாா்பில் இந்த நிறுவனம் தோ்ந்தெடுக்கப்பட்டு இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநா் மருத்துவா் எஸ். கோவிந்தராஜன், மாநில காசநோய் அதிகாரி டாக்டா் சி. வெங்கடேஷ் மற்றும் சுகாதார துறையின் மூத்த அதிகாரிகள் தக்ஷஷிலா பல்கலைக்கழக வேந்தரும்
ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி குழுமத் தலைவருமான எம். தனசேகரன், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி குழுமப் பொருளாளா் டி. ராஜராஜன், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி குழும செயலாளா் டாக்டா் கே. நாராயணசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.