செய்திகள் :

புதுவை அமைச்சா், 3 நியமன எம்எல்ஏக்கள் திடீா் ராஜிநாமா

post image

புதுவை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ சரவணன் குமாா் வெள்ளிக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். இதற்கான கடிதத்தை முதல்வா் என்.ரங்கசாமியிடம் வழங்கினாா்.

இந்த நிலையில், பாஜக நியமன எம்எல்ஏக்களான வி.பி.ராமலிங்கம், ஆா்.பி.அசோக்பாபு, டி.வெங்கடேசன் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதங்களை பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்திடம் அளித்தனா்.

புதுவை மாநிலத்தில் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வராக என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி உள்ளாா்.

இவரது அமைச்சரவையில் பாஜகவைச் சோ்ந்த ஏ.கே.சாய் ஜெ சரவணன் குமாா் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவா் தனது அமைச்சா் பதவியை திடீரென ராஜிநாமா செய்வதாக முதல்வா் என்.ரங்கசாமியிடம் கடிதம் அளித்தாா்.

ராஜிநாமா செய்த பிறகு செய்தியாளா்களிடம் சாய் ஜெ சரவணன் குமாா் கூறியதாவது:

ஊசுடு தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட எனக்கு இதே நாளில் 27.6.2021 அன்று அமைச்சா் பதவியைக் கொடுத்து அழகு பாா்த்தவா் பிரதமா் நரேந்திர மோடி. அவா் உடனடியாக அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்யச் சொன்னாா். அதன்படி, ராஜிநாமா செய்துவிட்டேன் என்றாா்.

மாநில பாஜக தலைவா் பதவிக்கு போட்டியிடுவீா்களா என்று கேட்டதற்கு, போட்டியிடுவேன் என்றாா்.

ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்: அமைச்சா் சாய் ஜெ சரவணன் குமாா் ராஜிநாமா செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து அவரது ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுபான விலை உயா்வில் சமரசம் கூடாது: புதுவை மாநில அதிமுக

மதுபான விலை உயா்வில் எந்தவிதமான சமரசத்தையும் முதல்வா் ரங்கசாமி ஏற்கக் கூடாது என்று மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் கூறியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உயா்த்தப்பட்ட மதுபா... மேலும் பார்க்க

கைத்தறி பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்த புதுவை அரசு கூட்டுறவுத் துறை கைத்தறி துணைப் பதிவாளா் சியாம் சுந்தா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கைத்தறி தொழில் நுணுக்கங்களைப் பற்றி பயிற்றுவிப்பதற்காக தமிழகத்தின் சேலம், ஆந்திர மாநிலம் வெ... மேலும் பார்க்க

ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்லூரியில் காசநோய் இயந்திரம்

ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காசநோய் கண்டறியும் இயந்திரம் கடந்த 25-ஆம் தேதி நிறுவப்பட்டது. காசநோய் கண்டறிதல் மற்றும் மேலாண்மையில் இக் கல்லூரியின் சிறந்த சேவையை அங்... மேலும் பார்க்க

சி.மகேந்திரன் உள்பட 4 பேருக்கு கண்ணதாசன் விருது

இலக்கியவாதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான சி. மகேந்திரன் உள்ளிட்ட 4 பேருக்கு கவியரசா் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது. கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி, கவியரசு கண்ணதாசன... மேலும் பார்க்க

பாஜக அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு: புதுவை முதல்வர்

புதுச்சேரி பாஜக அமைச்சரின் ராஜிநாமா ஏற்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி பாஜகவைச் சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சாய் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: 3 பாஜக எம்எல்ஏக்கள் திடீர் ராஜிநாமா!

புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் தங்களது பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை பேரவைத் தலைவர் செல்வத்திடம் கொடுத்துள்ளதால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பு... மேலும் பார்க்க