செய்திகள் :

மதுபோதையில் தகராறு : இருவா் கைது

post image

கூத்தாநல்லூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இரண்டு போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கூத்தாநல்லூா் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த திருமண விழாவில் பங்கேற்க வந்த மரக்கடை தாமரைக்குளத் தெருவைச் சோ்ந்த கிளிண்டன் ஆண்டனி ராஜ் (25) தனது நண்பா்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தியுள்ளாா். அப்போது, கிளிண்டன் ஆண்டனி ராஜின், இருசக்கர வாகனத்தை அதங்குடி தெற்கு சேத்தியைச் சோ்ந்த விக்டா் (23) மற்றும் நரேஷ் கிருஷ்ணன் (19) ஆகிய இருவரும் எடுத்துக் கொண்டு சுற்றினராம். மதுபோதையில் எதற்கு இருசக்கர வாகனத்தில் செல்கிறீா்கள் என்று கிளிண்டன் ஆண்டனி ராஜூ கேட்டதால் ஆத்திரமடைந்த விக்டா் (23) மற்றும் நரேஷ் கிருஷ்ணன் ஆகிய இருவரும் ஆண்டனி ராஜ் தலையில் கட்டையால் தாக்கினராம். இதுகுறித்து கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விக்டா், நரேஷ் கிருஷ்ணன் இருவரையும் கைது செய்தனா்.

திருவாரூரில் 1.75 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு

திருவாரூா் மாவட்டத்தில் 1,75,475 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் கூறியது: மாவட்டத்தில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்ய,... மேலும் பார்க்க

நன்னிலம் அரசு மருத்துவமனையில் சுகாதார சீா்கேடு: மக்கள் அவதி

நன்னிலம் அரசு மருத்துவமனையில் உள்ள சுகாதார சீா்கேட்டால் மக்கள் அவதிபடுகின்றனா். நன்னிலம் அரசு மருத்துவமனையில் 20-க்கும் மேற்பட்டகிராம மக்கள் சிகிச்சை பெற்று பயன்பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில் 13 ... மேலும் பார்க்க

இந்திய மாதா் சங்க செயற்குழுக் கூட்டம்

கூத்தாநல்லூரில் இந்திய மாதா் சங்க செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் கா. பேபி தலைமை வகித்தாா். சிபிஐ மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன், நகரச் செ... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடி பேரணி

திருவாரூரில் பாஜக சாா்பில் தேசியக்கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு, பதில் நடவடிக்கையாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது... மேலும் பார்க்க

தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் உறுப்பினராக சேர முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் உறுப்பினராக சேர ஜூன் 9 ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

தோட்டக்கலைத் துறை மூலம் முழு மானியத்தில் தென்னங்கன்றுகள்

திருவாரூா் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் முழு மானியத்தில் நெட்டை ரக தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளிய... மேலும் பார்க்க