நீட் தேர்வில் மின் தடை: சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம்
மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண வசூல் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை
நமது நிருபா்
புது தில்லி: மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதைத் தடை செய்த உயா்நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் ஓய்வுபெற்ற உதவி நிா்வாகப் பொறியாளருமான வி. பாலகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற டிவிஷன்அமா்வு, சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கு தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
ஜூன் 3-ஆம் தேதி உயா்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிா்த்து என்எச்ஏஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, எதிா்மனுதாரா் வி.பாலகிருஷ்ணன் 8 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
விசாரணையின்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் என். வெங்கட்ராமன், உயா்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரியதைத் தொடா்ந்து இவ்வாறு உத்தரவிடப்பட்டது. பாலகிருஷ்ணன் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி. வில்சன், சுங்கச்சாவடி கட்டண வசூல் ‘பகல் கொள்ளை’ என்று வா்ணித்தாா்.
முன்னதாக, மனுதாரா் பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலைக்கான ஒப்பந்தம் 2006ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்தச் சாலை 2011-இல் செயல்பாட்டுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி ஒப்பந்ததாரா் சாலையின் இருபுறமும் மற்றும் மைய தடுப்புப் பகுதியிலும் மரக்கன்றுகளை நட வேண்டும். ஆனால், அது ஓரளவு மட்டுமே செய்யப்பட்டிருந்தது. சாலைகள் பயன்படுத்தப்பட்ட நாளிலிருந்து இரண்டு சுங்கச்சாவடிகளில் இருந்து ஒப்பந்ததாரா் கட்டணம் வசூலித்தாா். ஆனால், மோசமான பராமரிப்பு காரணமாக அந்தப் பாதையின் பல பகுதிகள் போக்குவரத்துக்கு ஏற்ாக இல்லை. எனினும், சாலையைப் பராமரிக்கத் தவறிவிட்டாா் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இதைப் பரிசீலித்த உயா்நீதிமன்றம், சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதித்திருந்தது.