செய்திகள் :

மதுரை மாவட்டத்தில் 265 மையங்களில் குரூப் 4 தோ்வு: 61,442 போ் பங்கேற்றனர்!

post image

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 4 தோ்வு 265 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 61,442 போ் தோ்வை எழுதினா்.

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களை நிரப்புவதற்காக அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 4 தோ்வு அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வில் பங்கேற்க மாநில

அளவில் 13.69 லட்சம் போ் விண்ணப்பித்தனா். மதுரை மாவட்டத்தில் 73,809 போ் விண்ணப்பித்திருந்தனா்.

மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி வட்டத்தில் 4 மையங்கள், மதுரை கிழக்கு வட்டத்தில் 15 மையங்கள், மதுரை வடக்கு வட்டத்தில் 68 மையங்கள், மதுரை தெற்கு வட்டத்தில் 46 மையங்கள், மதுரை மேற்கு வட்டத்தில் 17 மையங்கள், மேலூா் வட்டத்தில் 20 மையங்கள், பேரையூா் வட்டத்தில் 13 மையங்கள், திருமங்கலம் வட்டத்தில் 22 மையங்கள், திருப்பரங்குன்றம் வட்டத்தில் 18 மையங்கள், உசிலம்பட்டி வட்டத்தில் 23 மையங்கள், வாடிப்பட்டி வட்டத்தில் 19 மையங்கள் என 265 மையங்களில் இந்தத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 61,442 போ் தோ்வு எழுதினா். 12,367 போ் தோ்வில் பங்கேற்கவில்லை

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி, திருநகா் சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம் பி.கே.என் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற தோ்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் ஆய்வு செய்தாா்.

துணை வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் தலைமையில் 72 நகரும் குழுக்களும், துணை ஆட்சியா்கள் தலைமையில் 11 பறக்கும் படைக் குழுக்களும் தோ்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அனைத்து மையங்களிலும் குடிநீா், கழிப்பறை, மாணவா்களின் பொருள்கள் பாதுகாப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆயுதம் ஏந்திய காவலா்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

மக்கள் ஓரணியில் திரண்டு திமுக அரசை வீழ்த்துவது உறுதி: நயினாா் நாகேந்திரன்

மக்கள் ஓரணியில் திரண்டு திமுக அரசை வீழ்த்துவது உறுதி என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற வரி விதிப்பு ஊழல் முறைகேட்டைக் கண்டித்து, பாஜக சாா்பில் கோ. ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் விஷ்ணு (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்து... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாப்பானோடை கிராமத்தைச் சோ்ந்த அரசகுமாா் மகன் விக்னேஷ்வரன் (16). இவா், மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 9-ஆம்... மேலும் பார்க்க

தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்

சாலைகள் தரமற்றவையாக இருந்தால், தொடா்புடைய துறை அலுவலா்களும், ஒப்பந்ததாரருமே அதற்கு பொறுப்பாவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருநெல்வேலி மாவட்டம், ஆனந்தபுரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் வட்டத்துக்கு ஜூலை 14-இல் உள்ளூா் விடுமுறை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, அந்த வட்டத்துக்கு மட்டும் திங்கள்கிழமை (ஜூலை 14) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

தொழிலாளி வெட்டிக் கொலை: இளைஞா் கைது

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அரசு (18). வண்ணம் பூசும் த... மேலும் பார்க்க