செய்திகள் :

மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்

post image

மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ஜூலை 30 வரை மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை மண்டலத்தில் பொறியியல் வேலைகள் நடைபெறவுள்ளதால், ஜூலை 16 முதல் 30 வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள் விவரம்

1. ரயில் எண் - 16847 - மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில்

ஜூலை 16, 20, 23, 27, 30 ஆகிய தேதிகளில் திருச்சி, காரைக்குடி, விருதுநகர் வழியாக இயக்கப்படும். மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் கல்லிக்குடி ஆகிய ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லாது. பயணிகளின் நலன் கருதி புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை சாலை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

2. ரயில் எண் - 16788 - ஸ்ரீ வைஷ்ணோ தேவி கத்ரா - திருநெல்வேலி விரைவு ரயில்

ஜூலை 17, 24 ஆகிய தேதிகளில் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை மற்றும் விருதுநகர் வழித்தடத்தில் இயக்கப்படும். திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை ஆகிய ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லாது. பயணிகளின் நலன் கருதி புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

3. ரயில் எண் - 16128 - குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்

ஜூலை 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் மற்றும் மணப்பாறை வழியாக இயக்கப்படாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.

4. ரயில் எண் - 16848 - செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில்

ஜூலை 16, 18, 19, 20, 21, 22, 24, 25, 26, 27, 30 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். கல்லிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மற்றும் மணப்பாறை வழியில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.

5. ரயில் எண் - 12666 - கன்னியாகுமரி - ஹெளரா அதிவிரைவு ரயில்

ஜூலை 19, 26 தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் வழியில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.

6. ரயில் எண் - 07229 - கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயில்

ஜூலை 18, 25 தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் வழியில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.

7. ரயில் எண் - 16352 - நாகர்கோவில் - மும்பை சிஎஸ்டி விரைவு ரயில்

ஜூலை 24, 27 தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, திண்டுக்கல் வழியில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.

8. ரயில் எண் - 16321 - நாகர்கோவில் - கோவை விரைவு ரயில்

ஜூலை 26, 27 தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு திண்டுக்கல் வழியில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி நிலையங்களில் நிற்கும்.

9. ரயில் எண் - 16354 - நாகர்கோவில் - காச்சிகுடா விரைவு ரயில்

ஜூலை 26 ஆம் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, திண்டுக்கல் வழியில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.

Southern Railway has announced that trains operating on the Madurai route will operate on an alternate route until July 30.

இதையும் படிக்க : தேர்வர்கள் கவனிக்க..! குரூப்-2 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு!

மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலைவலம்!

மயிலாடுதுறையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 15) சாலைவலம் மேற்கொண்டார். சாலையில் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண... மேலும் பார்க்க

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று மடப்புரம் கோயில் வளாகம், கோயிலுக்கு எதிரே காா் நிறுத்துமிடம், தவளைகு... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 15) தமிழகத்தில் ஓரிரு ... மேலும் பார்க்க

ஜூலை 17-ல் நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு வரும் ஜூலை 17 ஆம் தேதி ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில... மேலும் பார்க்க

காமராஜர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை!

காமராஜர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று(ஜூலை 15) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக... மேலும் பார்க்க