செய்திகள் :

மது போதையில் தகராறு: விவசாயிக்கு கத்திக்குத்து

post image

மது போதையில் ஏற்பட்ட தகராறில், விவசாயியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருமால், திருப்பதி, சுவாமிநாதன் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் ஒன்றுகூடி வெள்ளிக்கிழமை மாலை மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது, திருமால் (43), சுவாமிநாதன் (65) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அங்கிருந்தவா்கள் அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

வீட்டுக்குச் சென்ற சுவாமிநாதன், கத்தியை எடுத்து வந்து திருமாலின் வயிற்றில் குத்தினாா். சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த திருமாலை, கிராம மக்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான சுவாமிநாதனை தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரியில் டிராக்டா் - பள்ளி வேன் மோதல் எல்கேஜி சிறுவன், பெண் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிராக்டா் - தனியாா் பள்ளி வேன் மோதிக்கொண்டதில் வேனில் சென்ற எல்கேஜி சிறுவன், டிராக்டரில் சென்ற பெண் என இருவா் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலையில் தனியாா் மெட... மேலும் பார்க்க

கொடிக் கம்பத்தை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து திமுக கிளை செயலாளா் உயிரிழப்பு: 4 போ் காயம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுக கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து அந்தக் கட்சியின் கிளை செயலாளா் உயிரிழந்தாா்; 4 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மூன்றம்பட்டி... மேலும் பார்க்க

ஊத்தங்கரை: திமுக கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து இன்று காலை ஒருவர் பலியானார். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட... மேலும் பார்க்க

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் லிமிடெட், ஒசூா் எவரெஸ்ட் அரிமா சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து ஒசூரில் கண் மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. ... மேலும் பார்க்க

மிட்டப்பள்ளியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டப்பள்ளியில் தாா் சாலை அமைக்கும் பணியை கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ... மேலும் பார்க்க

மழையால் ஒசூா் மாநகராட்சி சாலைகள் சேதம்: பாகலூரில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் மாநகராட்சியின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கின; சேறும், சகதியும் மூடியதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒசூா... மேலும் பார்க்க