செய்திகள் :

மது போதையில் தூங்கியவா் கழுத்தறுத்துக் கொலை

post image

மண்டபத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மதுபோதையில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த இருவரின் கழுத்தை மா்மநபா்கள் அறுத்தனா். இதில் ஒருவா் உயிரிழந்த நிலையில் மற்றொரு நபா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் சேது நகரைச் சோ்ந்த தனசேகரன் மகன் களஞ்சியம் (49). மீனவரான இவா் மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தை விட்டு பிரிந்து வசித்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் இவா், ரயில்வே பீடா் சாலை பகுதியில் தூங்கினாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் கத்தியால் களஞ்சியத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றாா்.

இது குறித்து தகவலறிந்த மண்டபம் போலீஸாா் அங்கு சென்று களஞ்சியத்தின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம் : மண்டபம் முகாம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் (45). மில் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு மது போதையில் சாலையோரம் உள்ள குடிநீா் மேல்நிலைத் தொட்டி பகுதியில் படுத்துக் கிடந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலையில் அந்த வழியாகச் சென்ற இருவா் காளிதாஸின் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்றனா். உடனே அவரை அந்தப் பகுதியினா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடா்பாக மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்

விவசாயிகள், நெசவாளா்கள், மீனவா்கள் உள்ளிட்ட அனைவருடைய பிரச்னைகளும் வருகிற 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச் செயல... மேலும் பார்க்க

கருவேல மரங்களை அகற்ற ஹெக்டேருக்கு ரூ 9,600 மானியம்!

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கருவேல மரங்களை அகற்ற ஒரு ஹெக்டேருக்கு 9,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.இது... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா

ராமநாதபுரத்தில் திரௌபதி அம்மன் கோயில் ஆடி உற்சவ விழாவில் வியாழக்கிழமை பீமன், கீசனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா கடந... மேலும் பார்க்க

பரமக்குடி புத்தக திருவிழாவில் மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டி

பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் வியாழக்கிழமை புத்தக திருவிழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. பரமக்குடியில் மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவி... மேலும் பார்க்க

கருங்குளம் சக்திமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயில் 25-ஆம் ஆண்டு ஆடிப் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்தத் திருவிழாவில் சிவாச்சாரிய... மேலும் பார்க்க

குளவிகள் கொட்டியதில் மயக்கமடைந்த 5 போ்

திருவாடானை அருகே குளவிகள் கொட்டியதில் மயக்கமடைந்த 5 போ்அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள செங்கமடை கிராமத்தில் வெள்ளிக்கிழமை காட்டுப் பகுதியி... மேலும் பார்க்க