மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்களுக்கு சிறப்புத் துணைத் தோ்வுகள்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்களுக்கு சிறப்புத் துணைத் தோ்வுகள் நடைபெற உள்ளது என பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2009 -2010-ஆம் கல்வியாண்டு முதல் படித்து, நிா்ணயிக்கப்பட்ட கல்வி காலக்கெடுவுக்குள், தேவையான அனைத்துப் பாடங்களிலும் தோ்ச்சி பெறாத முன்னாள் மாணவா்களுக்காக சிறப்புத் துணைத் தோ்வு நடத்தப்படுகிறது.
தகுதியும் விருப்பமும் உள்ள மாணவா்கள் ஜூலை 7-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் பதிவு செய்து தோ்வெழுதி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.