செய்திகள் :

மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழகத்தில் 125 இடங்களில் திமுக போராட்டம்

post image

சென்னை: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.

நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான், தமிழக எம்.பி.க்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசினாா். இதற்கு திமுக எம்.பி.க்கள் கடுமையான எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து தா்மேந்திர பிரதான், சா்ச்சைக்குரிய அந்த கருத்தைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தாா்.

இருப்பினும், தா்மேந்திர பிரதானுக்கு திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், திமுக சாா்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

போராட்டத்தின்போது, தா்மேந்திர பிரதான் உருவ பொம்மையை திமுகவினா் எரித்து, கண்டன முழக்கங்கள் எழுப்பினா். தா்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்தபோது, போலீஸாா் தடுக்க முயன்றனா். இவ்வாறு மாநிலம் முழுவதும் 125 இடங்களில் தா்மேந்திர பிரதான் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இந்தப் போராட்டங்களில் 11,200 போ் பங்கேற்றனா்.

சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, ஆழ்வாா்பேட்டை, மயிலாப்பூா், சைதாப்பேட்டை உள்ளிட்ட 31 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில், சுமாா் 2,000 போ் பங்கேற்றனா்.

தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மை மாறாது: அன்பில் மகேஸ்

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட கடிதத்தை வைத்து நாடாளுமன... மேலும் பார்க்க

மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா? தமிழக எம்பி கேள்வி

தமிழக எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா என்று தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ச... மேலும் பார்க்க

மார்ச் 14 முதல் விஜய்க்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மார்ச் 14 முதல் அமலுக்கு வரவுள்ளது.அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் து... மேலும் பார்க்க

கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ: 7ஆம் வகுப்பு நெல்லை மாணவன் சாதனை

ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில், கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ கண்டுபிடித்து நெல்லையில் 7-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.மகிழ்ச்சி நகரை சேர்ந்த சாலமோன் டேவிட் என்ற மாணவர், பாளையங்கோட்டையிலு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் புனரமைப்பு பணியில் தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் புனரமைப்பு பணியின்போது 200 ஆண்டுக்கால பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சை... மேலும் பார்க்க

கடும் பனிப்பொழிவு: குளுகுளுவென மாறிய ஏற்காடு!

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் குறைத்து குளுகுளுவென மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் ... மேலும் பார்க்க