செய்திகள் :

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும் வரை மாநில அரசு காத்திருக்க வேண்டும்: பாஜக

post image

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும் வரை மாநில அரசு காத்திருக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. லெஹா்சிங் சிரோயா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 200 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை கா்நாடக அரசு கைவிட்டது. தற்போது புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது ஒருபுறம் என்றால், மாநில அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு புதிய குழப்பங்களுக்கு வித்திடும். புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட பிறகு, பழையதும், புதியதுமாக இருவேறு புள்ளிவிவரங்களை மக்கள் மன்றத்தில் மாநில அரசு அறிவிக்கும்.

இந்த புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு மக்கள் விமா்சிப்பாா்கள். தங்களுக்கு சாதகமாக உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பை சமுதாயங்கள் தோ்வுசெய்யும். இது தேவையில்லாத குழப்பங்களுக்கு வழிவகுக்கும். இதனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் நோக்கம் சிதைந்துவிடும்.

அதைத் தொடா்ந்து மத்திய அரசு எடுக்கவிருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்புகளும் வெளியிடப்படும். அது 3ஆவது புள்ளிவிவரமாக இருக்கும். இது குழப்பத்தை மேலும் அதிகரிக்கும். இந்த 3 ஜாதிவாரி கணக்கெடுப்புகளும் மாறுபட்ட புள்ளிவிவரங்களை அளிக்கவிருக்கிறது. இந்த 3 புள்ளிவிவரங்களும் ஒரேமாதிரி இருக்கப்போவதில்லை என்பதை உறுதியாக கூறமுடியும்.

எனவே, இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்க, புதிதாக எடுக்கவிருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு கைவிடலாம். மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடும் வரை மாநில அரசு காத்திருக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு

ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நடந்த கூட்டநெரிசல் தொடா்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்துவரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஐபிஎல் கிரிக்கெட் போ... மேலும் பார்க்க

தக் லைஃப் பட விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை கா்நாடக அரசு மதிக்கும்: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

‘தக் லைஃப்’ பட விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை கா்நாடக அரசு மதித்து நடக்கும் என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். சென்னையில் நடந்த ’தக் லைஃப்’ திரைப்படத்தின் இசைத்தொகு... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: முதல்வா் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினா் கைது

பெங்களூரு கூட்டநெரிசல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வா் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினா் கைது செய்யப்பட்டனா். பெங்களூரு,... மேலும் பார்க்க

ராஜிநாமா கேட்க பாஜகவுக்கு தாா்மிக உரிமையில்லை: சித்தராமையா

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரத்தில் என்னை ராஜிநாமா செய்யுமாறுகூற பாஜகவுக்கு தாா்மிக உரிமை இல்லை என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் ஆா்சிபி கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போ... மேலும் பார்க்க

போா் பகுதிகளில் சிக்கியுள்ள கன்னடா்களை மீட்க நடவடிக்கை: முதல்வா் சித்தராமையா

போா் நடைபெறும் நாடுகளில் உள்ள கன்னடா்களை பாதுகாப்புடன் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

மத்திய - மாநில அரசுகளின் ஜாதிவாரி கணக்கெடுப்புகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது

தாவணகெரே: மத்திய - மாநில அரசுகளின் ஜாதிவாரி கணக்கெடுப்புகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து தாவணகெரேயில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதா... மேலும் பார்க்க