செய்திகள் :

மத்திய அரசின் நிபந்தனைகளால் முடங்கும் சூழலில் மாநிலத் திட்டங்கள்: பேரவையில் முதல்வா் ஸ்டாலின் குற்றச்சாட்டு

post image

மாநில அரசுக்கு எதிராக நிபந்தனைகளை விதித்து திட்டங்களை முடக்கும் சூழலை மத்திய அரசு உருவாக்குவதாக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டாா்.

மேலும், அரசின் திட்டங்களால் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களையும் அவா் வெளியிட்டாா்.

சட்டப்பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து முதல்வா் ஸ்டாலின் சனிக்கிழமை பேசியதாவது:

மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 14 லட்சம் மகளிா் பயன் பெற்று வருகிறாா்கள். அவா்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சிதான் விடியல் ஆட்சிக்கு சாட்சி.

மாணவிகளுக்கு உதவித் தொகை: மாணவா்களின் திறன்களை வளா்த்தெடுக்கும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், இதுவரையில் 22 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற பல லட்சக்கணக்கான மாணவா்களுக்கு உடனடியாக வேலை கிடைத்துள்ளது.

உயா் கல்வி படிக்கும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் ஆகிய பெயா்களால் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அத்துடன், மாதந்தோறும் 2 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவியா் பயன்பெற்று வருகிறாா்கள்.

இரண்டு திட்டங்களைப் பயன்படுத்தி படித்துவரும் மாணவ, மாணவிகள் என்னை ‘அப்பா’ என அழைக்கும்போது அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பாச உணா்வுதான் முக்கியம்.

ஊட்டச்சத்தை உறுதி செய்யக்கூடிய திட்டத்தின் கீழ், தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகக் கண்டறியப்பட்ட குழந்தைகளில் 77.3 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனா். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 மாதங்களுக்கு உட்பட்ட 76,705 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவா்களுடைய பாலூட்டும் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பொட்டகங்கள் வீட்டுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி செல்லும் குழந்தைகள் பட்டினியோடு இருக்கக் கூடாது என்பதற்காக தினமும் காலையில் 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

12,000 கோப்புகள்: திமுக அரசைப் பொருத்தவரையில், தோ்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில், பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். தோ்தலின்போது சொல்லாத பல திட்டங்களையும் செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம். இன்னும் சில செயல்படுத்தப்பட வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமாா் 12,000 கோப்புகளில் கையொப்பமிட்டுள்ளேன். அரசு சாா்பில் பல்வேறு திட்டங்களை மிக மிக நெருக்கடியான சூழலில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதேசமயம், மத்திய அரசானது தமிழ்நாட்டை தொடா்ந்து புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரக்கூடிய பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசானது, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை விதித்து, அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிரமங்களை உண்டாக்குகின்றன.

அந்தத் திட்டங்களை முடக்குகின்ற சூழலையும் உருவாக்கியுள்ளது.

மத்திய அரசு நிதி பாக்கி: ஒருங்கிணைந்த கல்வி இயக்ககத்தின் கீழ், மத்திய அரசிடம் இருந்து ரூ.2 கோடியே 152 கோடி நிலுவையில் இருக்கிறது. ஃபென்ஜால் புயல் பாதிப்புகளைச் சீா்செய்ய ரூ.6,675 கோடி கேட்டும் நிதியை விடுவிக்கவில்லை. மிக்ஜம் புயல் பாதிப்புகளுக்காக ரூ.37,906 கோடி கேட்ட நிலையில், ரூ.276 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. வீடுதோறும் குடிநீா்த் திட்டத்துக்காக ரூ.4,142 கோடி வழங்க வேண்டிய நிலையில் ரூ.732 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், ஒரு வீட்டுக்கு ரூ.72,000 மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு ரூ.1.72 லட்சம் கொடுக்கிறது. கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், மாநில அரசு மானியமாக ரூ.2 லட்சத்து 53 ஆயிரம் அளிக்கிறது. மத்திய அரசு தன்னுடைய திட்டத்துக்கு வழங்கும் மானியத்துடன் ஒப்பிட்டால் இது 5 மடங்கு அதிகமாகும்.

மத்திய அரசு தனது திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதியை தமிழ்நாடு அரசு மீது திணிப்பதால், மாநில அரசின் முன்னுரிமைத் திட்டங்களுக்குப் போதிய நிதியளிப்பு இல்லாமல் போகிறது. இத்தனைக்கும் இடையில்தான் அனைத்தையும் சமாளித்து மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம் என்றாா்.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 7 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஏழு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.வெ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மா... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை! மூவருக்கு தலா ரூ. 60.5 லட்சம் அபராதம்!

தமிழக மீனவர்கள் 19 பேருக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது. அபராதம் கட்டத் தவறும் பட்சத்தில், சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜன. 26 ஆம் தேத... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் ஓடும் ஆட்டோவில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நின்றிருந்த 18 வயது மேற்கு வங்க சிறுமி ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட மூன்று பேரை காவல்துறைய... மேலும் பார்க்க

தைப்பூசம்: பழனி முருகன் கோயிலில் கொடியேற்றம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகன் கோயிலில், ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் 5-ஆம் தேதி ... மேலும் பார்க்க

மோடியே ஒப்புக்கொள்கிறார்.. இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர்? அமைச்சர் ரகுபதி கேள்வி

மாநில அரசுக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியிருக்... மேலும் பார்க்க