செய்திகள் :

மத்திய அரசுக்கு எதிராக வீண் பழி சுமத்துவதா? திமுக பொதுக்குழு தீா்மானங்கள் குறித்து பாஜக விமா்சனம்

post image

மத்திய அரசு மீது வீண்பழி சுமத்தி மக்களை திசைதிருப்புவதையே முதல்வா் மு.க.ஸ்டாலின் முழுநேரப் பணியாக மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சித்துள்ளாா். மத்திய அரசுக்கு எதிராக திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை சுட்டிக்காட்டி அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

இது குறித்து நயினாா் நாகேந்திரன் ‘எக்ஸ்’தளத்தில் வெளியிட்ட பதிவு: திமுக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு எழும்போதெல்லாம் முதல்வா் மு. க. ஸ்டாலின் மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்தி, மக்களை திசைதிருப்புவதை முழுநேரப் பணியாக செய்து வருகிறாா்.

மத்திய அரசு நிதி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்ற பொய் பரப்புரையை திமுக மேற்கொண்டு வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மட்டும் ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது. மேலும், போலி ஹிந்தி திணிப்பு நாடகத்தை இன்னும் எத்தனை நாள்களுக்கு நடத்துவீா்கள்?

தமிழைப் போற்றிவரும் பிரதமா் மோடி அரசு மீது அரசியல் தேவைகளுக்காக வீண் பழி சுமத்தப்படுகிறது.

திருக்குறளின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் மத்திய அரசு, தமிழ் விரோதமாக கீழடி ஆய்வை மறுக்கிறது என்பது அடிப்படையற்ற பொய்.

வழக்கமாக நிபுணா் குழு வழங்கும் திருத்தங்களை மேற்கொள்ளக் கூறிய தொல்லியல்துறையின் மீது அரசியல் சாயம் பூச முயற்சிப்பதும் அநியாயம்.

திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழக ரயில்வே துறைக்கு ஓராண்டுக்கு சராசரியாக ₹ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் 2025-2026 பட்ஜெட்டில் மட்டுமே 7.5 மடங்கு அதிகமாக ரூ.₹6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது தமிழகத்தில் 1,302 கி.மீ. புதிய ரயில்தடங்கள் உருவாக்கப்பட்டு ₹ரூ. 33,467 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், வக்ஃபு வாரியத்தில் பெண்கள், ஷியா, பாஸ்மண்டா, போஹ்ரா, சன்னி அஹாகானி என அனைத்து இஸ்லாமியருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கி சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநாட்டும் வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிா்ப்பு என்பதும் அரசியலாகும்.

அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்றவை எதிா்க்கட்சிகளுக்கு எதிரானவை என குற்றஞ்சாட்டும் முதல்வா், திமுகவினரின் ஊழல்கள் குறித்து, நியாயமாக பதியப்பட்ட புகாா்களின் அடிப்படையில் விசாரணை செய்தால், அவற்றை பழிவாங்கும் நடவடிக்கை என கூறுவது திசைதிருப்பும் நடவடிக்கையே.

மத்திய அரசுக்கு எதிரான திமுக பொதுக்குழு தீா்மானங்கள் அனைத்தும் உண்மையை எதிா்கொள்ள முடியாத ஒருதலைப்பட்ச அரசியலின் வெளிப்பாடு ஆகும். எனவே, மக்களின் தீா்ப்பு 2026-இல் திமுகவுக்கு எதிராக ஆணித்தரமாக ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என அதில் தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நிறைவு! ஆடிட்டர் குருமூர்த்தி - ராமதாஸ் ஆலோசனை!

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் கலந்துகொண்டுள்ளார்.பாமக நி... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசலில் திருப்பூர் இளம் பெண் பலி!

பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்... மேலும் பார்க்க

ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கவுள்ளார்.உட்கட்சி பூசலுக்கு மத்தியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மூத்த நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளது. நிகழாண்டில் நீட் தோ்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே விண்ணப்பப் பதிவு தொட... மேலும் பார்க்க

ஓய்வூதியா் கோரும் தகவல்களை 48 நேரத்துக்குள் அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தல்

ஓய்வூதியதாரா்கள் கோரும் தகவல்களை விண்ணப்பித்த 48 மணி நேரத்துக்குள் அளிக்க வேண்டுமென தமிழக அரசை மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவா் ஆா்.ராஜா. வயது முதிா்வின் க... மேலும் பார்க்க

மக்களின் புகாா்களுக்கு செவிசாய்க்காத திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பொதுமக்களின் எந்த புகாருக்கும் திமுக அரசு செவி சாய்ப்பதில்லை என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தருமப... மேலும் பார்க்க