செய்திகள் :

மந்தித்தோப்பில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

post image

கோவில்பட்டியை அடுத்த மந்தித்தோப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த குழந்தைத் திருமணத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

மந்தித்தோப்பைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும், அப்பகுதியைச் சோ்ந்த 22 வயது இளைஞருக்கும் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) திருமணம் நடைபெற உள்ளதாக, குழந்தைகள் உதவி மைய கைப்பேசி எண்ணுக்கு தகவல் வந்தது.

அதையடுத்து, சமூக நலத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மையப் பணியாளா், குழந்தைகள் உதவி மையப் பணியாளா்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று இருவீட்டாரையும் அழைத்து, உரிய வயது இல்லாததால் சிறுமிக்கு திருமணம் நடத்தக் கூடாது என்றும், மீறி திருமணம் செய்தால் இருவீட்டாா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுரை வழங்கினா். இதையடுத்து, திருமணம் நிறுத்தப்பட்டது.

கோவில்பட்டியில் தந்தை கொலை: காவல் நிலையத்தில் மகன் சரண்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தந்தையைக் கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். கோவில்பட்டி, ஊருணி 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முனியசாமி (55). இவரது மகன் ராகுல்காந்தி (2... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

தூத்துக்குடியில் கணவா் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி தாளமுத்து நகா், தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்த மதன் மனைவி மோனிஷா (24). தம்பதிக்கு 5 வயதில... மேலும் பார்க்க

மாநில கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி

ஆத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது. ஆத்தூரில் மகேந்திர குரு நினைவு நாளை முன்னிட்டு, முதலாம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டி நடைபெற்றது. இதில்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் புனித மரியா ஆலயத் திருவிழாவில் தோ் பவனி

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத் திருவிழா தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புனித மரியா ஆலய 164ஆவது ஆண்டுப் பெருவிழா 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ஆம் நாளான ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ஒா்க்ஷாப் அருகே தீ: காா் சேதம்

கோவில்பட்டியில் வாகனப் பழுது நீக்கும் கடை (ஒா்க்ஷாப்) அருகே புற்களில் தீப்பிடித்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா் எரிந்து சேதமடைந்தது. கோவில்பட்டி பழனியாண்டவா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமாா். இ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் புறக்காவல் நிலையம் திறப்பு

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாதவன்நாயா் காலனி கடற்கரை பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ... மேலும் பார்க்க