இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
மனநல நிறுவனங்களை ஒரு மாதத்துக்குள் பதிவுசெய்ய அறிவுறுத்தல்
வேலூா் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிசிக்சை, மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டுக்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள், மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மனநல நிறுவனங்கள் அனைத்தும் மனநலப் பராமரிப்புச் சட்டம் 2017-இன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
வேலூா் மாவட்டத்தில் இவ்வாறு பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் பதிவு செய்ய தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநலக் காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற அலுவலகத்தில் ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ய்ஞ்ா்ஸ்ண்ய்/க்ம்ங்/க்ம்ங்.ல்ட்ல் என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044 - 26420965 என்ற தொலைபேசி எண்ணிலும், ற்ய்ள்ம்ட்ஹஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம்.
இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள், நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் தமிழ்நாடு மாநில ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறினால், உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.